இளையதளபதியுடன் இணைந்த பிரபல நடிகையின் மகள்

  • IndiaGlitz, [Tuesday,September 22 2015]

தமிழ், தெலுங்கு, இந்தி என முக்கிய மொழிகளில் இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் இதுகுறித்த எவ்வித பதட்டமும் இன்றி விஜய் தன்னுடைய அடுத்த படமான 'விஜய் 59' படத்தில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், 'ராஜா ராணி' படத்தை இயக்கிய அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார்.

விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமிஜாக்சன் ஆகியோர் நடித்து வரும் இந்த படத்தில் இயக்குனர் மகேந்திரன், ராதிகா சரத்குமார், பிரபு, 'நான் கடவுள்' ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாக நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன என்பதை அறிவோம். விஜய்யின் மகள் கேரக்டரில் நடிக்க பல குழந்தைகள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் இறுதியில் பிரபல நடிகை மீனாவின் மகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பல பேட்டிகளில் மீனா தன்னை மிகவும் கவர்ந்த நடிகை என்று விஜய் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி 'ஷாஜஹான்' படத்தில் விஜய்யுடன் 'சரக்கு வச்சிருக்கேன்' என்ற பாடலில் மீனா நடனம் ஆடியுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More News

அஜீத்தின் அனல் பறக்கும் பஞ்ச் வசனங்கள். ஒரு பார்வை

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் என்று அழைக்கப்படும் அஜீத்தின் வசன உச்சரிப்பே மற்ற நடிகர்களிடம் இருந்து வித்தியாசமாக இருக்கும். அதிலும் அவர் பேசும் பஞ்ச் வசனங்கள் அதிர வைக்கும்...

திருப்பூர் சுப்பிரமணியன் தலையீட்டால் முடிவுக்கு வந்த லிங்கா பிரச்சனை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' திரைப்படத்தால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு தரவேண்டும் என ஒருசில விநியோகிஸ்தர்கள்...

நியூசிலாந்தில் 'புலி' செய்த சாதனை

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவருகிறது என்பது அனைவரும் அறிந்ததே...

21 வயது இளைஞரின் இயக்கத்தில் முதன்முதலாக ரகுமான்

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்த நடிகர்களில் ஒருவர் ரகுமான். புதுப்புது அர்த்தங்கள்...

'டார்லிங் II' ஆக மாறிய 'ஜின்'

மெட்ராஸ்' பட புகழ் கலையரசன் முக்கிய வேடத்தில் நடித்த 'ஜின்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது...