close
Choose your channels

கள்ளக்காதலுக்கு ஆர்.கே.நகர் டெக்னிக்கை பயன்படுத்திய இளம்பெண்

Saturday, October 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.20 டோக்கன் கொடுத்து அந்த டோக்கனை தேர்தல் முடிந்த பின்னர் கொடுத்து பணம் பெற்று கொள்ளலாம் என்று ஒரு வேட்பாளர் அறிவித்ததாக கூறப்பட்டது. இதே டெக்னிக்கை கள்ளக்காதலுக்கு ஒரு இளம்பெண் பயன்படுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஈரோடு பகுதியை சேர்ந்த வளர்மதி என்ற பெண் 20 ரூபாய் நோட்டில் தனது மொபைல் எண்ணை எழுதி புழக்கத்தில் விட்டுள்ளார். இந்த நோட்டு பல இடங்களுக்கு சென்று பின்னர் செந்தில்குமார் என்பவரின் கையில் சிக்கியது. அவர் அந்த நோட்டில் உள்ள மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு வளர்மதியிடம் பேசினார்.

முதலில் நட்பாக தொடங்கிய இந்த உறவு பின்னர் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் வெளியே சுற்றுவது மட்டுமின்றி தனியாக அறையெடுத்தும் தங்கினர். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் செந்தில்குமாரை திருமணம் செய்ய முடிவு செய்த வளர்மதி அவருடன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வளர்மதியின் தாயார் காவல்துறையில் புகார் செய்ய காவல்துறையினர் இருவரையும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். வளர்மதிக்கு ஏற்கனவே மூர்த்தி எனபவருடன் திருமணம் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.