close
Choose your channels

கார்த்திக் நரேன் பெயரில் மோசடி: திடுக்கிடும் தகவல்

Wednesday, June 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’துருவங்கள் பதினாறு’ என்ற முதல் படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகையே தன் பக்கம் திரும்ப வைத்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன் என்பது தெரிந்ததே. இவருடைய இரண்டாவது படமான ’நரகாசுரன்’ ஒரு சில காரணங்களால் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் சமீபத்தில் வெளியான ’மாபியா’ திரைப்படம் இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு மீண்டும் நல்ல பெயரை பெற்று தந்தது.

இந்த நிலையில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கார்த்தி நரேனின் அடுத்தப் படத்தில் நடிக்கவும் தொழில்நுட்ப பணிகள் செய்யவும் வாய்ப்பு வாங்கி தருவதாக மர்ம நபர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் பண மோசடி செய்து வருவதாகத் தெரிகிறது. இது குறித்து தகவல் தனது பார்வைக்கு வந்தவுடன் இயக்குனர் கார்த்திக் நரேன் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து தன்னுடைய அடுத்த படத்தில் பணிபுரிய வாய்ப்பு வாங்கி தருவதாக வரும் தகவலை யாரும் நம்பவேண்டாம் என்றும் இது முழுக்க ஒரு மோசடி நபரின் செய்கை என்றும் இந்த நம்பரில் இருந்து மெசேஜ் வந்தால் அந்த எண்ணை பிளாக் செய்யவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவும் தான் திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கார்த்திக் நரேன் பெயரில் மர்ம நபர் ஒருவர் செய்து வரும் மோசடியால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.