வீடு தேடி வரும் அத்தியாவசிய பொருட்கள்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மட்டும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை போன்ற கடைகள் மதியம் 2.30 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அது நேற்று முதல் அமல் படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் அத்தியாவசிய பொருட்களை வீடு தேடி வந்து கொடுக்கும் நடவடிக்கை பின்பற்றப்படுவதால் தமிழகத்திலும் அதேபோல் பின்பற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது

இதனை அடுத்து அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கே வந்து கொடுக்கும் கடைகள் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதன்படி வளசரவாக்கம், ஆற்காடு ரோடு, மதுரவாயல், நெற்குன்றம், போரூர், அண்ணாசாலை உள்பட ஒரு சில பகுதிகளில் வீட்டுக்கே வந்து அத்தியாவசியமான பொருட்கள் கொடுக்கப்படும் என்றும் அதற்காக தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் குறித்தும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனால் சென்னை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 

More News

ஒரு மாலை வாங்க கூட முடியவில்லை: பரவை முனியம்மா இறுதிச்சடங்கு குறித்துஒரு நடிகரின் நெகிழ்ச்சியான பதிவு

கிராமத்து பாடல்களை பாடும் பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா, நேற்று அதிகாலை காலமான நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஒருசிலர் மட்டுமே

டீ குடித்தால் கொரோனா போகுமா??? தொடரும் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி!!!

கொரோனா பரவத்தொடங்கியதில் இருந்து அதற்கான மருந்து பொருட்களைப் பற்றிய வதந்திகளும் அதிகமாகி கொண்டே வருகின்றன

பவன்கல்யாண் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்த முதல்வர்

ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீகாகுளம் என்ற பகுதியைச் சேர்ந்த 99 ஆந்திர மாநில மீனவர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை துறைமுகத்தில் சிக்கி தவிப்பதாகவும், அவர்களை

அமெரிக்கா; நடைமுறையில் இருக்கும் சமூக விலகல் ஏப்ரல் 30 வரை தொடரும்!!! ட்ரம்ப் அறிவிப்பு!!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக நடைமுறையில் உள்ள சமூக விலகல் ஏப்ரல் 30 வரை தொடரும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார் .

கொரோனா; ஆபத்தான நகரங்களில் ஒன்று சென்னை!!! இலங்கை சுகாதாரத்துறை அறிவிப்பு!!!

கொரோனா பரவலைத் தடுக்க இலங்கை அரசு பல தடுப்பு நடவடிக்ககைளை எடுத்து வருகிறது. கொரோனா பாதிப்புள்ள ஒரு கிராமத்தை முற்றிலும் தனிமைப்படுத்தி இரா