பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த..: சிஎஸ்கே வீரரின் அதிர வைக்கும் டுவீட்

  • IndiaGlitz, [Saturday,August 22 2020]

தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட மொத்தம் 8 அணிகள் விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக சென்னை அணி உள்பட ஒரு சில அணிகள் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்று விட்டது என்பதும் மீதமுள்ள அணிகளும் விரைவில் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு ஐபிஎல் சீசன் தொடங்கும் போது சிஎஸ்கே வீரர்கள் தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் அட்டகாசமான டுவிட்டுகளை பதிவு செய்து வருவார்கள். குறிப்பாக இம்ரான் தாஹிர் மற்றும் ஹர்பஜன்சிங் ஆகிய இருவரும் தமிழில் டுவிட்டுகளை பதிவு செய்து வருவார்கள் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் தற்போது ’பராசக்தி எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் இம்ரான் தாஹிர் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ் டுவிட்டுகளை ரஜினியின் வசனத்தோடு ஆரம்பித்து விட்டார். அவர் இந்த சீசனின் முதல் டுவீட்டாக தமிழில் பதிவு செய்திருப்பதாவது: ‘என் இனிய தமிழ் மக்களே! உங்கள் நலம், நலம் அறிய ஆவல்! பலமுறை வந்தோம் வென்றோம் சென்றோம். இம்முறை வருகிறோம் வெல்வோம் செல்வோம் உங்கள் நல்லாசியுடன்! பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்தை... எடுடா வண்டிய போடுடா விசில.. என்று பதிவு செய்துள்ளார்.
 

More News

இந்தி தெரியாதவர்கள் விலக வேண்டுமா? கமல்ஹாசன், வைரமுத்து ஆவேசம்!

சமீபத்தில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் ஆன்லைன் மூலம் யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில்

வந்தாரை வாழ வைக்கும் சென்னை: சென்னை தின சிறப்பு கட்டுரை

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது தெரிந்ததே. அதேபோல் தமிழகத்தின் உள் மாவட்ட மக்களை குறிப்பாக தென்மாவட்ட மக்களை வாழ வைக்கும் தாய் வீடாக சென்னை இருந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.

139 பேர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்: 25 வயது பெண்ணின் திடுக்கிடும் குற்றச்சாட்டு

25 வயது பெண் ஒருவர் தன்னை கடந்த சில ஆண்டுகளாக 139 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

முதல்முறையாக தளபதி விஜய்யுடன் பணிபுரிகிறார்களா இந்த இரட்டையர்கள்?

தமிழ் சினிமாவில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர்களாக இருந்து வரும் அன்பு அறிவு என்ற இரட்டையர்கள் அன்பறிவ் என்ற பெயரில் பல திரைப்படங்களின் பணிபுரிந்து வருகின்றனர்

வாணி போஜனின் அடுத்த படம்: டைட்டில் மற்றும் கதை குறித்த தகவல்

'தெய்வமகள்' உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த நடிகை வாணி போஜன், 'ஓ மை கடவுளே' என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்