ஷங்கர்-வடிவேலு சமரசம்: மீண்டும் தொடங்கும் 'இம்சை அரசன் 2'

  • IndiaGlitz, [Wednesday,November 21 2018]

வடிவேலு நடிப்பில் ஷங்கர் தயாரிப்பில் இயக்குனர் சிம்புதேவன் இயக்கி வந்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது. ஆனால் திடீரென வடிவேலுவுக்கும் ஷங்கர் மற்றும் சிம்புதேவனுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

இதுகுறித்த பஞ்சாயத்து தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தின் மூலம் நடந்தது. வடிவேலுவுக்கு சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்படவுள்ளதாக கூட செய்திகள் வெளியாகின

இந்த நிலையில் இம்சை அரசன் படக்குழுவுக்கும், வடிவேலுவுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்ததாகவும், இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் விரைவில் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சிம்புதேவன், இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிக்கும் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டபோதிலும், 'இம்சை அரசன்' படத்தை முடித்தபின்னரே அவர் புதிய படத்தை இயக்குவார் என தெரிகிறது