பொன்னியின் செல்வன்: கமல்ஹாசன் உள்பட 5 நடிகர்கள் இணைந்த மாஸ் அறிவிப்பு!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இந்த படம் வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்பதும் இந்த விழாவில் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தை கமல்ஹாசன் உள்பட 5 பிரபல நடிகர்கள் பொன்னியின் செல்வன் கதை குறித்து முன்னுரை கூறியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் கமல்ஹாசன், இந்தியில் அனில் கபூர், மலையாளத்தில் பிரித்விராஜ், தெலுங்கில் ராணா டகுபதி மற்றும் கன்னடத்தில் ஜெயந்த் கைகினி ஆகிய ஐவரும் ஐந்து மொழிகளில் பொன்னின் செல்வன் முன்னுரை குறித்த உரையை பேசி உள்ளனர் என மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

More News

முட்டாள்களே, இதைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டதே இல்லை: குஷ்புவின் காட்டமான பதிவு!

முட்டாள்களே இதைப்பற்றி நீங்கள் கேள்விப் பட்டதே இல்லையா என குஷ்பு காட்டமாக தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'நானே வருவேன்' படத்தின் ஒன்லைன் கதை: தனுஷ் வெளியிட்ட மாஸ் தகவல்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'நானே வருவேன்' திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உறியடி விஜய்குமாரின் புதிய படம்: 62 நாட்களில் முடிந்த படப்பிடிப்பு!

'உறியடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விஜயகுமார் நடிப்பில் , சேத்துமான் படத்தின் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் தயாராகிவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும்

பிக்பாஸ் தமிழ் சீசன் 6, அதிகாரபூர்வ அறிவிப்பு: தொகுத்து வழங்குபவர் இவர் தான்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் என்பதும் இந்த நிகழ்ச்சி கடந்த ஐந்து சீசன்களாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. 

'நானே வருவேன்' படத்தின் ரிலீஸ் அப்டேட்: கலைப்புலி எஸ் தாணு அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நானே வருவேன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.