சென்னை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்கள் யார் யார்?

2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட அனைத்து அணிகளும் ஒரு சில வீரர்களை அணியில் இருந்து வெளியேற்றி உள்ளது

அந்த வகையில் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மிகவும் மோசமாக விளையாடிய கேதார் ஜாதவ்வை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னை அணியில் இருந்து ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, முரளி விஜய் ஆகியோர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஷேர்ன் வாட்சன் ஓய்வு பெற்றதால் சென்னை அணியில் இருந்து விலகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஐந்து வீரர்களுக்கு பதிலாக சென்னை அணி வேறு புதிய வீரர்களை ஏலம் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை அணியை அடுத்து பஞ்சாப் அணி மேக்ஸ்வெல், ஷெல்டன் காட்ரால், கெளதம், முயிப் ரஹ்மான், நீஷம், ஹார்டஸ் வில்ஜொன், கருண்நாயர் ஆகியோர்களையும், ஐதராபாத் அணி பில்லி ஸ்டான்லேக், ஃபேபியன் அலன், சஞ்சய் யாதவ், சந்தீப், பிரித்விராஜ் ஆகியோர்களையும், பெங்களூரு அணி ஆரோன் பின்ச், மொயின் அலி, உடானா, ஷிவம் டூப், உமேஷ் யாதவ், பவன் நேகி மற்றும் குர்கீர்த் மன் ஆகியோர்களையும், கொல்கத்தா அணி டிம் செய்பெர்ட், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ் ஆகியோர்களையும் விடுவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

More News

டாக்டர் சாந்தாவின் மறைவு குறித்து சூர்யாவின் டுவீட்!

சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் தலைவராக இருந்த டாக்டர் சார்ந்த அவர்கள் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

காணமல் போன ஜா மா பொது வெளிக்கு வந்தார்? என்ன நடந்தது அவருக்கு?

கடந்த அக்டோபர் மாத இறுதியில் தான் கலந்து கொள்ள வேண்டிய பிரபல டிவி நிகழ்ச்சி உரையாடலில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார்

2 கோடி வசூல்ன்னா 20 கோடின்னு சொல்வாங்க: 'மாஸ்டர்' பட வசூலை கலாய்த்தாரா அமைச்சர்?

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நிலையில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூல் செய்து விட்டதாகவும் உலகம் முழுவதும் 200 கோடி வசூலை நெருங்கி

சிவகார்த்திகேயன் உதவியால் நனவான கனவு: மருத்துவ மாணவி நெகிழ்ச்சி!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள பூக்கொல்லை என்ற கிராமத்தைச் சேர்ந்த சஹானா என்ற மாணவி பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தும் குடும்ப வறுமையால் டாக்டருக்கு படிக்க வேண்டும்

கமலுக்கு மெசேஜ் அனுப்பிய பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி!

105 நாட்களாக நடைபெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனின் டைட்டில் வின்னர் ஆக ஆரி மக்களால் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் அவருக்கு சம்பளம் மற்றும் பரிசு தொகை சேர்த்து கிட்டத்தட்ட