மக்கள் உயிர் தான் முக்கியம், வருமானம் அல்ல: டாஸ்மாக் மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி கருத்து

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்துள்ள நிலையில் இந்த தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் பி.என்.பிரகாஷ் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த இந்த விசாரணையில் தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், ‘ டிஜிட்டல் முறையை பின்பற்றுவதற்கான நடைமுறைகளை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த நாளொன்றுக்கு 500 டோக்கன் நடைமுறையை பின்பற்ற உள்ளதாகவும், மதுபான விற்பனை நடைமுறை குறித்து உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதாகவும் வாதிட்டார்.

ஆன்லைன் மூலம் மதுபான விற்பனைக்கு தேவையான மென்பொருள் மற்றும் செயலியை வழங்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் மட்டுமே பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசுத்தரப்பில் விரிவான பதில்மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். அதற்கு அரசுத்தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக மனுதாரர்கள் தரப்பில் வாதாடியபோது, ‘மது பழக்கம் ஒரு கொடிய நோய் என்றும் ஏழை - எளிய மக்கள், தங்களின் வருமானத்தில் அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்றி கொள்ளாமல் மதுபான கடைகளுக்கு செலவழிப்பதாகவும் வாதாடினர். மேலும் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க டாஸ்மாக் முழுமையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகள் மதிக்கப்படவில்லை எனவும் வாதாடினர்.

இருதரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘டாஸ்மாக் வழக்கில் மக்கள் உயிர் தான் முக்கியம் வருமானம் அல்ல என்றும், அரசியல் சாசனத்தின் பாதுகாவலனாக இருக்கும் நீதிமன்றம், பொது அமைதியும், சட்டம் - ஒழுங்கும் சீர்குலைந்தால் கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியாது எனவும் தெரிவித்தனர். நாளையும் இந்த வழக்கின் விசாரணை தொடரவுள்ளதால் நாளைய விசாரணைக்கு பின் தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கடந்த 10 நாட்களில் குறைவான கொரோனா பாதிப்பு: மீண்டு வரும் தமிழகம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 700க்கும் மேற்பட்டோர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்படுத்திய நிலையில் நேற்று 509 பேருக்கு கொரோனா

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு கிலோ கொண்டைக்கடலை இலவசம்: நிர்மலா சீதாராமன்

பாரத பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் நாட்டு மக்களிடையே உரையாடியபோது ரூ.20 லட்சம் கோடிக்கான நலத்திட்டங்களை நிதியமைச்சர் அறிவிப்பார் என்று கூறினார்.

கொரோனா சர்ச்சையில் அமெரிக்காவுடன் கைக்கோர்க்கிறதா இந்தியா???

உலகம் முழுவதும் கொரோனா  வைரஸ் பரவல் கடும் நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

தனிமைப்படுத்திய விவகாரம்: நடிகர் ராதாரவி விளக்கம்!

நடிகர் ராதாரவி சமீபத்தில் சென்னையில் இருந்து கோத்தகிரியில் உள்ள தனது வீட்டிற்கு குடும்பத்தினர்களுடன் சென்றதாகவும், அதன் பின்னர் அவர் அங்குள்ள சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி

சலூன் கடைக்காரரின் மகளான கல்லூரி மாணவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பார்த்திபன்

மதுரையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் ஒருவர் தனது மகளின் மேற்படிப்பிற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த ரூபாய் ஐந்து லட்சத்தை தனது பகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட