டிடிவி தினகரனுக்கு ஆதரவு கொடுத்த அடுத்த நாள் சரத்குமார் வீட்டில் ரெய்டு

  • IndiaGlitz, [Friday,April 07 2017]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் தற்போது உச்சகட்டத்தில் உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சசிகலா அணியின் வேட்பாளரான டிடிவி தினகரனுக்கு ஆதரவு என பிரபல நடிகரும் அகில இந்திய சமத்துவ கட்சி தலைவருமான சரத்குமார் நேற்று அதிரடியாக அறிவித்தார். இந்த பகுதியில் ஒரு குறிப்பிட்ட சாதியினர்களின் வாக்குகள் அதிகமாக இருக்கும் நிலையில் சரத்குமாரின் ஆதரவு தினகரனின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை டிடிவி தினகரனுக்கு ஆதரவு என்று தெரிவித்த நிலையில் இன்று காலை அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு செய்து வருகின்றனர். டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்க அவர் பணம் பெற்றிருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையா என்பது ரெய்டின் முடிவில் தெரியவரும். மேலும் இன்று காலை தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரசிகர்கள் வாங்கும் ஒவ்வொரு டிக்கெட்டிலும் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய்! விஷால் முக்கிய அறிவிப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஏப்ரல் 2ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பதவியேற்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விஷால் கஷ்டப்படும் விவசாயிகளுக்கு உதவுவது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் கூறியதாவது...

தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து கடிதம்

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலின் 'நம்ம அணி[' கிட்டத்தட்ட அனைத்து பதவிகளிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் புதிய நிர்வாகிகளின் பதிவேற்பு விழா நேற்று மாலை சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது....

தனுஷின் முதல் முயற்சிக்கு கிடைத்த முக்கிய வெற்றி

கோலிவுட் திரையுலகில் இளம் வயதிலேயே நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என முக்கிய துறைகளில் ஜொலித்து வந்த தனுஷ் தற்போது இயக்குனர் துறையிலும் கால்பதித்துள்ளார். அவர் இயக்கிய முதல் படம் 'பவர்பாண்டி' வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது...

பாகுபலி'க்கு பின் மீண்டும் ஒரு சரித்திர படத்தில் சத்யராஜ்-ராணா

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடித்த சத்யராஜ் மற்றும் ராணா மீண்டும் ஒரு வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளனர்...

'நந்தா' சூர்யா கேரக்டரில் நடிக்கும் பிரபல தயாரிப்பாளர்

பிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தருமான ஆர்.கே.சுரேஷ், தேசிய விருது பெற இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் நடிகரானார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ஆர்.கே.சுரேஷின் நடிப்பிற்கு பெரும் பாராட்டுக்கள் கிடைத்தது...