close
Choose your channels

நொறுங்கிபோன இந்தியக் கோட்டை… அடுத்த போட்டியில் கோலி விளையாடுவாரா?

Friday, January 7, 2022 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியக் கிரிக்கெட் அணி இதுவரை ஜோகனஸ்பர்க்கில் தோல்வியைத் தழுவியதே இல்லை எனும் வெற்றிச் சிரிப்போடு 2 ஆவது டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினர். ஆனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி தற்போது இந்தியாவை தோற்கடித்துள்ளது.

இதையடுத்து கோலி 2 ஆவது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ளாததே காரணம் எனச் சில ரசிகர்கள் விமர்சனம் வெளியிட்டு வரும் நிலையில் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா எனும் கேள்விக்கு கே.எல்.ராகுல் பதிலளித்துள்ளார். அதில் விராட் கோலிக்கு முதுகில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு தற்போது குணமாகியிருக்கிறது. இதனால் வரும் 11 ஆம் தேதி கேப்டவுனில் நடைபெறவுள்ள 3 ஆவது டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்டுவிளையாடுவார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் முகமது சிராஜ்க்கு காலில் எற்பட்ட காயம் சரியாகியுள்ளது. ஆனால் அவர் 3ஆவது டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்வது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். அதோடு உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இவர்கள் குறித்தும் விரைவில் முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

அதேபோல முதல் இன்னிங்ஸில் இந்தியா மேலும் 50, 60 ரன்களை எடுத்திருக்க வேண்டும். முதல் இன்னிங்ஸில் ரன்களை குவிக்காததே இந்திய அணியின் தோல்விக்கு முதல் காரணம் என்றும் அவர் கூறியிருப்பது இந்திய ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.