உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் சாதனை

உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா மே மாதம் 30ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கிவிட்டது. முதல் போட்டியான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளின் போட்டிக்கு கூட இன்னும் டிக்கெட்டுக்கள் முழுமையாக விற்பனை ஆகவில்லை.

ஆனால் அதற்குள் ஜூன் 16ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் முழுமையாக விற்று தீர்ந்துவிட்டன. கடந்த 2013ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எந்த தொடரிலும் விளையாடவில்லை. இடையில் சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ளது.

இந்த நிலையில் புல்வாமா தாக்குதல் காரணமாக உலகக்கோப்பை போட்டியிலும் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட கூடாது என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றானர். எனவே இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது., போட்டி நேரத்தில் இந்திய அரசு எடுக்கும் முடிவை பொறுத்தே இந்த போட்டி நடப்பதை உறுதி செய்ய முடியும். இந்த நிலையில் போட்டி நடைபெறுவது உறுதியாக தெரியாத நிலையிலும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுக்கள் முழுவதும் 48 மணி நேரத்தில் விற்பனையாகி சாதனை செய்துள்ளது.
 

More News

வாக்காளர்களுக்கு தல மகளின் அன்புக்கட்டளை

இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் இன்று ஐந்தாம் கட்ட தேர்தல் ஏழு மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.,

'நீயா 2' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்: காரணம் இதுதான்!

ஜெய், வரலட்சுமி, கேதரின் தெரசா , ராய்லட்சுமி நடிப்பில் உருவான 'நீயா 2' திரைப்படம் மே 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது

இஸ்லாம் மதம் மாறிவிட்டாரா கஸ்தூரி?

நடிகை கஸ்தூரி தனது துணிச்சலான அரசியல் மற்றும் சமூக கருத்துக்களால் அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம்பெறுவார். அதுமட்டுமின்றி சில சமயங்களில் சர்ச்சைகளிலும் அவர் சிக்குவது உண்டு.

ஒரே நாளில் இரண்டு பிரபுதேவா-தமன்னா படங்கள் ரிலீஸ்!

பிரபுதேவா ,தமன்னா நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கிய 'தேவி' படத்தின் இரண்டாம் பாகமான 'தேவி 2' திரைப்படம் வரும் 31ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

பாண்ட்யா படத்தை போட்டு திட்டு வாங்கிய பிரபல நடிகை!

மும்பை அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து நெட்டிசன்களிடம் பிரபல நடிகை ஒருவர் திட்டு வாங்கி கொண்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது