இந்தியக் கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

கிறிஸ்டியானோ ரொனால்டோவைத் தொடர்ந்து உலகில் அதிக கோல்களை அடித்த 2 ஆவது கால்பந்து வீரர் சுனில் சேத்ரி. கடந்த 2002 ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடி வரும் இவர் தற்போது இந்திய கால்பந்து கேப்டனாகவும் பொறுப்பு வகித்து வருகிறார். சமீபத்தில் பெங்களூரு FC அணிக்காகவும் சேத்ரி விளையாடி உள்ளார்.

இந்நிலையில் சேத்ரி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகத் தெரிவித்து உள்ளார். அதில், “ஒரு மகிழ்ச்சியற்ற பதிவு- எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரு ஆறுதலான செய்தி, நான் நன்றாக உள்ளேன். கொரோனாவில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். எனவே மீண்டும் கால்பந்து களத்திற்கு விரைவில் திரும்புவேன். அனைத்துப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்க அனைவருக்கும் நினைவூட்டுவதற்கு இதைவிட சிறந்த நேரம் இல்லை” எனத் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் வரும் மார்ச் 25, 29 ஆம் தேதிகளில் துபாய், ஓமன், ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற உள்ள கால்பந்து போட்டிகளில் சேத்ரி விளையாட இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக உலக அளவில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்ற சேத்ரி 115 போட்டிகளில் 75 கோல்கள் அடித்து சாதனை படைத்து உள்ளார்.

மேலும் 36 வயதான சுனில் சேத்ரி ஆசியாவின் ஐகான் என்ற பட்டமும் பெற்று இந்திய கால்பந்து அணிக்கு பெருமை சேர்த்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சிவகார்த்திகேயனின் 'டான்' படம் குறித்த சூப்பர் அப்டேட்!

'டாக்டர்' திரைப்படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதன்பின் சமீபத்தில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. தற்போதைய தகவலின்படி இந்த படம் ரம்ஜான் திருநாளில் மே 14-ஆம் தேதி வெளியாகும்

சர்வதேச கிரிக்கெட்டில் புது சாதனை படைத்த மிதாலி ராஜ்… குவியும் பாராட்டு!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்து தற்போது ஓய்வு பெற்று இருக்கிறார்.

தேர்தல் துளிகள்: 12 மார்ச் 2021

திமுக ஒதுக்கிய கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் மொத்தம்- 61.<p style="text-align:justify"><strong><img alt="" src="https://indiaglitz-media.s3.amazonaws.com/tamil/home/therdhathulgial+1.jpg" style="height:675px; width:1200px" /></strong></p><p style="text-align:justify"> </p><p style="text-align:just

இளம் பெண்ணுக்கு திடீர் பிரசவவலி- உடற்கல்வி ஆசிரியர் செய்த துணிச்சலான காரியம்!

பெங்களூரில் உள்ள பூங்கா ஒன்றிற்கு ஒரு பழங்குடியினப் பெண் நிறைமாதக் கர்ப்பதோடு தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வந்து இருக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்: கமல் போட்டியிடுவது எங்கே?

அதிமுக, திமுக கூட்டணியை அடுத்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் மூன்றாவது அணி போட்டியிடுகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில்