ஒரே நாளில் உலக அளவில் இரண்டாவது இடம்: கொரோனா பாதிப்பில் இந்தியாவுக்கு அதிர்ச்சி

கடந்த சில வாரங்களுக்கு முன் உலகில் அதிகம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் 10வது இடத்திற்கும் கீழே இருந்த இந்தியா, சமீபத்தில் 4வது இடத்திற்கு முன்னேறியது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளை அடுத்து இந்தியா இருந்த நிலையில் திடீரென நேற்று ரஷ்யாவை பின்னுக்கு தள்ளிவிட்டு மூன்றாவது இடத்திற்கு முன்னேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் உலக அளவில் மொத்த கொரோனா பாதிப்பில் 3வது இடத்தை பிடித்த இந்தியா, ஒரே நாளில் உலக கொரோனா ஒருநாள் பாதிப்பில் இன்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 49,458 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 22,510 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 3-வது இடத்தில் உள்ள பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 21,486 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒருநாள் கொரோனா பாதிப்பில் மட்டுமின்றி ஒருநாள் கொரோனா பலி எண்ணிக்கையிலும் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு பிரேசிலில் 656 பேர்களும், இந்தியாவில் ஒரே நாளில் 474 பேர் பேர்களும், அமெரிக்காவில் ஒரே நாளில் 360 பேர் பேர்களும் மரணம் அடைந்துள்ளதால் பிரேசிலை அடுத்து இந்தியா, பலி எண்ணிக்கையிலும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும்
 

More News

50% சம்பளத்தை குறைத்த கோலிவுட்டின் முன்னணி நடிகை!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்பு எதுவும் நடக்காததால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தயாரிப்பாளருக்கு உதவும் வகையில்

பீட்டர்பாலுடன் நெருக்கமாகிய மகள்கள்: அப்பா-மகள் உறவு குறித்து வனிதா பெருமிதம்!

நடிகை வனிதா மற்றும் பீட்டர்பால் திருமணம் சமீபத்தில் நடந்து பெரும் சர்ச்சையான நிலையில், சர்ச்சை குறித்து கவலைப்படாமல், அவ்வபோது பதிலடி கொடுத்து வரும் வனிதா, தனது

பாலியல் வன்கொடுமையால் பலியான சிறுமி ஜெயப்ரியா குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் உதவி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி ஜெயப்பிரியா பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இதுவொரு சைலண்ட் செல்பி: க்யூட் குழந்தையுடன் ஆல்யா மானசா

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'ராஜா ராணி' என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் புகழ்பெற்று லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்ற நடிகை ஆல்யா மானசா அந்த தொடரின் நாயகன் சஞ்சீவ் கார்த்திக்கை

'தலைவி இல்லைனா நான் இல்லை': அடல்ட் பட தமிழ் நடிகையின் புகைப்படத்திற்கு ரசிகரின் கமெண்ட்!

கௌதம் கார்த்திக், யாஷிகா நடிப்பில் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கிய அடல்ட் காமெடி திரைப்படமான ;இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற திரைப்படம்