close
Choose your channels

உக்ரைன்- ரஷ்யா போருக்கு இடையே இந்தியா எடுத்திருக்கும் அதிரடி முடிவு… நடப்பது என்ன?

Sunday, March 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

25 ஆவது நாளாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய இராணுவம் கடுமையான போர் நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால் மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை அறிவித்து இருக்கின்றன. அதிலும் அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து இனிமேல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதில்லை எனும் திட்டவட்டமான முடிவில் இருக்கிறது.

இந்நிலையில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதைச் செயல்படுத்தி இருப்பது பல உலக நாடுகள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியா பொதுவாக 85% கச்சா எண்ணெய் பொருளுக்கு மற்ற நாடுகளையே நம்பியிருக்கிறது. அந்த வகையில் சவுதியிடம் இருந்து 18%, ஐக்கிய அரபு நாடுகளிடம் இருந்து 11%, ஈராக் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளிடம் இருந்து 23% என கச்சா எண்ணெய் பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. இதில் ஈராக் மற்றும் வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் விலை குறைவாகக் கிடைத்துவந்த போதிலும் அமெரிக்கா இவ்விரு நாடுகளின் மீது பொருளாதார தடையை விதித்துவிட்ட காரணத்தால் இந்தியாவும் இந்த நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை கடந்த சில ஆண்டுகளாக தவிர்த்து வந்தது.

ஆனால் முதல் முறையாக அமெரிக்கா, ரஷ்யா மீது பொருளாதாரத் தடையை விதித்து இருந்தாலும் அதையும் மீறி தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இந்தியா துணிந்துள்ளது. இதனால் இந்தியா ரஷ்யாவிற்கு வெளிப்படையாக ஆதரவு அளிக்கிறதா? என உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் பொருளாதாரத்தடை கொள்கையை இது மீறுவது ஆகாது என மத்திய அரசு விளக்கம் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் இரண்டும் இணைந்து ரஷ்யாவிடம் இருந்து கடந்த 15 நாட்களில் 2,03,000 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் இறக்குமதி செய்திருக்கிறது. மேலும் இதுவரை தவிர்த்துவந்த வெனிசுலா, ஈராக் நாடுகளிடம் இருந்தும் இந்தியா இனிமேல் கச்சா எண்ணெய் பொருட்களை இறக்குமதி செய்யும் இதனால் இந்திய மக்களுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.