கொரோனா பாதிப்பில் கடந்த 14 நாட்களாக இந்தியாதான் டாப்!!! அதிர்ச்சி தகவல்!!!

  • IndiaGlitz, [Tuesday,August 18 2020]

 

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 55,076 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக இந்தியச் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது. இதனால் தொடர்ந்து 14 நாட்களாக இந்தியாவில் அதிகளவு கொரோனா எண்ணிக்கை பதிவாகி இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று ஒரேநாளில் இந்தியாவில் 879 மரணங்களும் நிகழ்ந்து இருக்கின்றன.

தற்போது இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா எண்ணிக்கை 27,02,743 ஆக அதிகரித்து இருக்கிறது. குணமடைந்து விடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,97,780 ஆக பதிவாகி இருக்கிறது. மேலும் 6,73,166 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51,797 ஆக உயர்ந்து இருப்பதகாவும் இந்தியச் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் சேகரிக்கப்படும் கொரோனா மாதிரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அந்த மாதிரிகளில் குறைந்த அளவே கொரோனா உறுதி செய்யப்படுவதாகவும் இந்தியச் சுகாதாரத்துறை மகிழ்ச்சி செய்தி கூறியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 8,99,864 மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுவரை இந்தியாவில் 3 கோடியே 9 லட்சத்து 41 ஆயிரத்து 264 கொரோனா மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இருக்கின்றன. அந்த மாதிரிகளில் 6.12% பேருக்கு மட்டுமே கொரோனா உறுதிச் செய்யப்பட்டிருக்கிறது என்பதும் தற்போது கொஞ்சம் நிம்மதி தரும் தகவலாகப் பார்க்கப்படுகிறது.

More News

ஜிவி பிரகாஷூக்காக கார்த்திக் சுப்புராஜ் செய்த உதவி: இணையத்தில் வைரல்

ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படத்தின் பாடல் ஒன்றை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு செய்த உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதோடு அவர் வெளியிட்ட பாடல்

ஆன்லைன் வகுப்பு வைக்க துடிக்கும் பள்ளிகள்- இணைய வசதியே இல்லாத 94% குழந்தைகள்!!!

இந்தியாவில் கடந்த மார்ச் 23 இரவு முதல் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

அப்பா ஆனார் ஆர்ஜே விஜய்: குவியும் வாழ்த்துக்கள்

எப்எம் வானொலிகளில் இருந்து தமிழ் திரையுலகில் நுழைந்து தங்களுக்கு என ஒரு இடத்தை பிடித்த நட்சட்த்திரங்களில் ஆர்ஜே பாலாஜி, ஆர்ஜே விக்னேஷ் உள்பட பலர் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஆர்ஜே விஜய்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அப்பாவின் உடல்நிலை: தமிழ் நடிகர் தகவல்

கன்னியாகுமரி தொகுதி எம்பியும், பிரபல தொழிலதிபரும் தமிழ் நடிகர் விஜய் வசந்தின் தந்தையுமான வசந்தகுமார் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு

ஆசை ஆசையாய் அமெரிக்காவில் இருந்து வந்த கணவனை வீதியில் நிறுத்திய மனைவி: கொரோனா படுத்தும்பாடு

ஆசைஆசையாக மனைவியையும் குழந்தையையும் பார்க்க அமெரிக்காவில் இருந்து வந்த கணவர் ஒருவரை வீதியில் நிறுத்திய மனைவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது