தமிழகத்தில் ஒருவருக்கு புதியவகை கொரோனா உறுதி… சுகாதாரத்துறை தகவல்!!!

 

இங்கிலாந்தில் 70% வேகமாகப் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தமிழகத்தில் ஒருவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் தகவலை தமிழகச் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். முன்னதாக கடந்த 27 ஆம் தேதி லண்டனில் இருந்து திரும்பி வந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதையடுத்து அந்த மாணவர் சென்னையின் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரது ரத்த மாதிரி பூனே ஆயவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸின் உருமாறிய புதிய வகை பரவுவதாகப் பரப்பு ஏற்பட்டது. இந்த புதியவகை கொரோனா வைரஸ் மற்ற வகையைவிட 70% வேகமாகப் பரவுதாகவும் கூறப்பட்டது. இதனால் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களுக்கு 4 ஆம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இங்கிலாந்து நாட்டுடனான விமானப் போக்குவரத்தையும் பல உலக நாடுகள் தடை செய்துவந்தன.

இந்நிலையில் இந்தியாவிலும் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்தது. அதையடுத்து இங்கிலாந்தில் இருந்து திரும்பும் அனைவரையும் சுகாதாரத்துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் இதுவரை 6 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் மாதிரி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகத் தமிழகச் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

More News

அனிதா சம்பத் வீட்டில் ஏற்பட்ட துயர சம்பவம்: பிக்பாஸ் ரசிகர்கள் இரங்கல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வலிமையான போட்டியாளர்களில் ஒருவர் அனிதா சம்பத் என்பதும் அவர் ஆரியிடம் கோபப்பட்ட ஒரே காரணத்திற்காக தான் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார் என்பதும் தெரிந்ததே

‘குடி‘மகன்களுக்கு இனி கொண்டாட்டம்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!!

டாஸ்மாக் பார்களை இன்று முதல் திறந்துகொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. கடந்த மார்ச் 24 ஆம் தேதி மூடப்பட்ட டாஸ்மாக் பார்கள் 8 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட இருக்கிறது

ஆரியை ரவுண்டு கட்டும் ஹவுஸ்மேட்ஸ்: புத்திசாலித்தனமாக தப்பித்த சோம்!

பிக்பாஸ் வீட்டில் ஆரிக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே போவது வெளியில் உள்ள பார்வையாளர்களுக்கு நன்றாக தெரியும்.

மாஸ்டர், கைதி, பிகில் படங்களில் நடித்த முக்கிய நடிகர் உயிரிழப்பு… திரையுலகினர் அதிர்ச்சி!!!

பிரபல டப்பிங் கலைஞரும் நடிகருமான அருண் அலெக்சாண்டர் தீடிர் மாரடைப்பால் காலமானார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் மறைவுக்கு சச்சின் பதிவு செய்த டுவீட்!

ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்களின் தாயார் கரீமா பேகம் அவர்கள் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியை பார்த்தோம்.