இன்று முதல் அனைத்து நாடுகளுக்கும் விசா இல்லை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவிவிட்டது என்பதும் சுமார் 60 இந்தியர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வைரஸ் காரணமாக பெங்களூரை சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர் நேற்று மரணமடைந்தார் என்பதும் கேரளாவில் 85 வயது பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்குதலால் கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் மேலும் பரவாமல் இருக்க மத்திய அரசு ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி இன்று முதல் மார்ச் ஏப்ரல் 15ஆம் தேதி வரை அனைத்து நாடுகளுக்கும் விசா கிடையாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது. இருப்பினும் சர்வதேச அமைப்புகள், ஐநா அதிகாரிகள், வேலை நிமித்தம் செல்பவர்களுக்கு மட்டும் விலக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சீனா, இத்தாலி, ஈரான்,கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சென்று, பிப்ரவரி 15ம் தேதிக்கு பின்னர் நாடு திரும்பிய இந்தியர்கள் மற்றும் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 14 நாள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது.

More News

ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகருக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்

சீனாவில் கடந்த சில நாட்களுக்கு முன் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் சீனா முழுவதும் பரவியது மட்டுமன்றி உலகம் முழுவதும் சுமார் 123 நாடுகளுக்கும் பரவியுள்ளது.

கொரோனாவுடன் பள்ளிக்கு சென்ற மாணவி: அதிரடி நடவடிக்கை எடுத்த பள்ளி நிர்வாகம்

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் வெளிநாட்டிலிருந்து வரும் இந்தியர்களால் இந்தியாவிலும் இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது

நடக்கும் என்பார் நடக்காது: கஸ்தூரிக்கு கிடைத்த அதிரடி வெற்றி 

அஜித் ரசிகர்களுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் இடையே சமூக வலைதளங்களில் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அஜித் ரசிகர்கள் என்ற போர்வையில்

ரஜினி வீட்டின் முன் அதிகாலையிலேயே குவிந்த ரசிகர்கள்: அரசியல் அறிவிப்பா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 5ஆம் தேதி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்திய நிலையில்

அடுத்தடுத்து இரண்டு காதல்: இளம்பெண்ணை தாயாருடன் சேர்த்து கொலை செய்த காதலர்

தனக்கு கிடைக்காத காதலி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற ஆத்திரத்தில் வாலிபர் ஒருவர் காதலியை மட்டுமன்றி அவரது தாயாரையும் சேர்த்து கொலை செய்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது