கடைசி பந்துக்கு முன்னர் பூம்ராவிடம் விராத் கோஹ்லி கூறியது என்ன?

  • IndiaGlitz, [Sunday,January 29 2017]

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா வென்றுள்ளது. இந்நிலையில் முதல் டி-20 போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, டி-20 தொடரையும் வெல்ல வேண்டுமானால் நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது

நாக்பூரில் நடந்த நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் விராத் மற்றும் ராகுல் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். விராத் கோஹ்லி 21 ரன்களில் ஆட்டமிழந்தாலும் ராகுலின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்தது. ராகுல் 71 ரன்கள் குவித்தார்.

145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்களை நெஹ்ரா மற்றும் பூம்ரா அவ்வப்போது கட்டுப்படுத்தி வந்தனர். இருப்பினும் இங்கிலாந்து அணி இறுதியில் வெற்றியை நெருங்கிவிட்டது. கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற வெறும் 8 ரன்களே தேவைப்பட்டது. டி-20 போட்டியில் 6 விக்கெட்டுக்கள் கையில் இருக்கும்போது 8 ரன்கள் எடுப்பது என்பது ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால் பூம்ராவின் அபாரமான பந்துவீச்சு இங்கிலாந்தின் வெற்றி கனவை தகர்த்துவிட்டது.

ஆம் கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்திய பூம்ரா, கடைசி பந்தை வீசும்போது அதிகம் யோசித்தார். ஏனெனில் அந்த பந்தில் ஒரு சிக்ஸர் அடித்துவிட்டால் இந்தியா தோல்வியை தழுவிவிடும். விராத் கோஹ்லியிடம் அவர் இதுகுறித்து ஆலோசனை கேட்டபோது, 'எந்தவித டென்சனும் இல்லாமல் உங்களால் இயல்பாக எப்படி பந்துவீச முடியுமோ, அவ்வாறே பந்துவீசுங்கள்' என்று கோஹ்லி கொடுத்த நம்பிக்கையான வார்த்தைகளை மனதில் கொண்டு கடைசி பந்தை வீசினார் பூம்ரா. அந்த பந்தை சந்தித்த அலி, ஒரு ரன்னை கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் கடைசி நேர நம்பிக்கையான ஆட்டம் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமநிலையை அடைந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த ஆட்டம் பிப்ரவரி 1ஆம் தேதி பெங்களூரில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தையும் வென்று இந்திய அணி டி-20 தொடரையும் வெல்ல நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

More News

சென்னையில் மூடப்பட்ட முப்பது ஆண்டுகால சினிமா பொக்கிஷம்

கடந்த 30 ஆண்டுகளாக சென்னையில் இயங்கி வந்த சினிமா வீடியோ நூலகம் தற்போது மூடப்பட்டது...

ரிலீசுக்கு முன்பே ரூ.100 கோடி. 'சி 3' தயாரிப்பாளர் தகவல்

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி3' படத்தின் பிரஸ்மீட் நேற்று நடந்தது. இதில் சூர்யா, ஞானவேல்ராஜா, ஹரி உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்...

என்னையும் கைது செய்யுங்கள். சிம்புவின் ஆவேச பேட்டி

சென்னை மெரீனாவில் மாணவர்கள் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றாலும் கடைசி தினத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக மாணவர்கள் மற்றும் மீனவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தன...

'சிவலிங்கா'வை முந்துகிறதா 'மொட்டசிவா கெட்டசிவா'

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ஹாரர் காமெடி படமான 'சிவலிங்கா' படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்பட இருந்த நிலையில், இந்த படத்திற்கு முன்பே அவர் நடித்த இன்னொரு படமான 'மொட்டசிவா கெட்டசிவா' ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

சென்னை மெரீனாவில் திடீர் 144 தடை. நடைப்பயிற்சி செல்ல முடியுமா?

சென்னை மெரீனாவில் கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடை விதித்திருப்பதாக காவல்துறையினர் நேற்று அறிவித்திருந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...