உலக டெஸ்ட் சாம்பியன் யார்? இறுதிப் போட்டியில் பேட்டிங்கை துவங்கிய இந்தியா!

இந்தியா- நியூசிலாந்து இடையிலான உலகச் சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாம் நாளான இன்று போட்டி துவங்கியுள்ள நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்ஸ் டாஸ் வென்றுள்ளார். ஆனால் அவர் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணி தற்போது பேட்டிங் செய்ய களம் இறங்கி இருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் சவுதாம்படனில் நேற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் போட்டி துவங்க இருந்தது. ஆனால் மழை விட்டு விட்டு பெய்ததால் முதல் நாள் போட்டியை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதனால் இரண்டாம் நாளான இன்று போட்டி துவங்கி இருக்கிறது. எனினும் நேற்றைய போட்டியை ஈடுகட்டும் விதமாக ஆறாவது நாளும் போட்டி தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி வரும் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More News

நமது கல்வி உரிமையைப் பாதுகாப்போம்: நீட் தேர்வு குறித்து சூர்யா அறிக்கை!

நமது கல்வி உரிமையைப் பாதுகாப்போம் என்றும், ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்றும் அகரம் பவுண்டேசன் சார்பில் நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா

ரவுடி பேபி சூர்யாவை கவனிங்க....!போலீசிடம் கோரிக்கை வைத்த நெட்டிசன்கள்....!

யுடியூபில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்த பப்ஜி மதனை, நேற்று காவல் துறையினர் கைது செய்தனர்.

சுதந்திர இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுதந்த சாதனை நாயகன் உயிரிழப்பு!

இந்தியா சுதந்திரம் பெற்றப்பிறகு தடகளப் போட்டியில் வெற்றிப்பெற்று இந்தியாவிற்காக முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுதந்தவர் மில்கா சிங்.

லூசிபர் இயக்குநரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு… இந்தப் படத்திலும் மோகன்லால் இருப்பாரா?

“லூசிபர்” வெற்றிக்குப் பிறகு நடிகர் பிருத்விராஜ் தான் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா புறப்பட்டார் ரஜினிகாந்த்: வீடியோ வைரல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் செல்வார் என்றும் அங்கு அவர் உடல் பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும்