close
Choose your channels

உலக டெஸ்ட் சாம்பியன் யார்? இறுதிப் போட்டியில் பேட்டிங்கை துவங்கிய இந்தியா!

Saturday, June 19, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா- நியூசிலாந்து இடையிலான உலகச் சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாம் நாளான இன்று போட்டி துவங்கியுள்ள நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்ஸ் டாஸ் வென்றுள்ளார். ஆனால் அவர் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணி தற்போது பேட்டிங் செய்ய களம் இறங்கி இருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் சவுதாம்படனில் நேற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் போட்டி துவங்க இருந்தது. ஆனால் மழை விட்டு விட்டு பெய்ததால் முதல் நாள் போட்டியை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதனால் இரண்டாம் நாளான இன்று போட்டி துவங்கி இருக்கிறது. எனினும் நேற்றைய போட்டியை ஈடுகட்டும் விதமாக ஆறாவது நாளும் போட்டி தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி வரும் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.