close
Choose your channels

இந்தியா மீண்டும் வென்றுவிட்டது. பிரதமர் மோடி டுவீட்

Thursday, May 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்களவை தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதலே பாஜகவுக்கு ஆதரவாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் ஒருமுறை தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பாஜக 294 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. எனவே மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியபோது, 'இந்தியா மீண்டும் வென்றுவிட்டது. வலிமையான ஒன்றிணைந்த இந்தியாவை உருவாக்க நாம் ஒன்றிணைவோம். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செழிப்புடன் வளர்வோம்' என்று பதிவு செய்துள்ளார்.

முன்னதாக வாக்களித்த அனைவரும் நன்றி என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.