close
Choose your channels

'இந்தியன் 2' பட விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு!

Thursday, April 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வந்த ’இந்தியன் 2’ திரைப்படம் திடீரென நிறுத்தப்பட்டது என்பதும் இதனை அடுத்து ஷங்கர், ராம்சரண் தேஜா நடிக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் தங்களது ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என சென்னை ஐகோர்ட்டில் சமீபத்தில் லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ‘ஷங்கர் வேறு படங்களை இயக்கக் கூடாது என இடைக்கால தடை விதிக்க முடியாது’ என்றும் உத்தரவிட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ’இந்தியன் 2’ படத்தை முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க ஷங்கருக்கு தடை கோரிய வழக்கில் மேல்முறையீடு செய்ய தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து விரைவில் லைக்கா நிறுவனம் இந்த வழக்கை மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.