நிலவில் கால்பதிக்க இருக்கும் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட விண்வெளி வீரர்!!!

  • IndiaGlitz, [Friday,December 11 2020]

 

அமெரிக்கா கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் நிலவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்பி பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாசாவின் அடுத்த கனவுத் திட்டம் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நாசா நிலவுக்கு அனுப்ப உள்ள விண்வெளி வீரர்களின் பட்டியலில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அதுவும் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு விண்வெளி வீரர் இடம்பெற இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாசா விண்வெளி ஆய்வு மையம் வரும் 2024 ஆம் ஆண்டு ஆர்டெமிஸ் எனும் பெயரில் 18 பேர் கொண்ட விஞ்ஞானிகளின் குழுவை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டு வருகிறது. அந்த வீரர்களின் பெயர் பட்டியலை அமெரிக்காவின் துணை அதிபர் மைன் பென்ஸ் நேற்று வெளியிட்டார். மேலும் இந்த வீரர்களுக்கான பயிற்சியானது புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு கூடம் துவங்க இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

18 பேர் கொண்ட பெயர் பட்டியலில் உலகிலேயே முதல் முறையாக 9 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் இடம் பெற்று உள்ளனர். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா ஜான் வர்புதூர் சாரி எனும் விண்வெளி வீரர் இடம்பெற இருக்கிறார். அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் இவர் பிறந்து வளர்ந்தாலும் இவருடைய தந்தை நம்முடைய ஹைத்ராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஒரு தமிழர் என்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த 1977 ஆம் ஆண்டு ஜுன் 29 ஆம் தேதி பிறந்த சாரி அமெரிக்கா ஏர் ஃபோர்ஸில் விண்வெளி பொறியியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். இவர் நாசாவின் ஆர்டெமிஸ் கனவுத் திட்டத்தின் மூலம் வரும் 2024 ஆம் ஆண்டு நிலவுக்குச் செல்ல இருக்கிறார். இந்த நிகழ்வு இந்தியாவிற்கு பெருமை தேடித்தரும் ஒரு நிகழ்வாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நிஷாவின் டபுள்கேம்: தோலுரித்த நெட்டிசன்களின் குறும்படம்!

பிக்பாஸ் வீட்டில் நேற்று புதிய மனிதா டாஸ்க்கின் போது அர்ச்சனாவுக்கு பாக்ஸி ரோபோ என பெயர் வைத்தது நான் இல்லை என்றும், நீதான் என்றும் நிஷா, நேற்று அனிதாவிடம் ஆவேசமாக வாதாடினார்.

1,130 கோடி லாட்டரி ஜெயித்தும் செகணெண்ட் கார் வாங்கிய விசித்திர தம்பதி!!! நண்பர்களுக்கும் உதவிக்கரம்!!!

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு லாட்டரி மூலம் 1,130 கோடி ரூபாய் கிடைத்தும் அவர்கள் அந்தப் பணத்தை பயன்படுத்தாமல் செகணெண்ட் கார் வாங்கிய விசித்திர சம்பவம் நடைபெற்று உள்ளது.

விஜய்யின் நெய்வேலி செல்பியை பார்த்த முதல் நடிகர்: பரபரப்பு தகவல் 

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்த போது அந்த படப்பிடிப்பை காண வந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விஜய் ஒரு செல்பி எடுத்து அதனை சமூக வலைதளங்களில்

உரியடி விஜயகுமாரின் அடுத்த படம்: இயக்குனராகும் உதவி இயக்குநர்!

விஜயகுமார் நடித்த 'உரியடி' மற்றும் 'உறியடி 2' ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த இரண்டு படங்களிலும் உதவி இயக்குனராக

கரெக்ட் பாயிண்ட் சொன்னா போயிடுவாரு, இதுதான் ரியோ: வறுத்தெடுத்த அனிதா!

பிக்பாஸ் வீட்டில் நேற்று மோசமான போட்டியாளராக தேர்வு செய்யப்பட்ட அனிதா சிறைக்குச் சென்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான முதல் புரமோவில் சிறையில் இருக்கும்