மீண்டும் டாக்டர் தொழிலுக்கு திரும்பும் 'மிஸ் இங்கிலாந்து' பட்டம் வென்ற இந்திய பெண்

  • IndiaGlitz, [Wednesday,April 08 2020]

கடந்த 2019 ஆம் ஆண்டு ’மிஸ் இங்கிலாந்து’ பட்டம் வென்ற இந்திய வம்சாவளி பெண் கடந்த சில மாதங்களாக டாக்டர் தொழிலை விட்ட நிலையில் தற்போது கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக மீண்டும் டாக்டர் தொழிலுக்கு திரும்ப உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

பாஷா முகர்ஜி என்ற 24 வயது பெண், 9 வயதாக இருக்கும்போதே தனது குடும்பத்தினருடன் இங்கிலாந்து நாட்டுக்கு சென்று விட்டார். அங்கேயே படித்து வளர்ந்த பாஷா அதன்பின் இரண்டு மெடிக்கல் டிகிரிகளையும் பெற்றார். இங்கிலாந்தில் உள்ள ஒரு மிகப் பெரிய மருத்துவமனையில் பணி புரிந்து கொண்ட போதுதான் திடீரென அவர் அழகி போட்டியில் கலந்து கொண்டார். அந்த அழகி போட்டியில் அவர் 2019ஆம் ஆண்டுக்கான மிஸ் இங்கிலாந்து’ பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

அதனை அடுத்து டாக்டர் தொழிலை கைவிட்டு இந்தியா திரும்பிய பாஷா, மேலும் பல அழகிப் போட்டிகளில் கலந்து கொள்ளவும் மாடலிங் தொழிலிலும் முயற்சி செய்தார். இந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வரைஸால் கொத்துக் கொத்தாக மனித இனமே அழிந்து கொண்டிருப்பதையும் குறிப்பாக தான் வளர்ந்த இங்கிலாந்து நாட்டில் மிக மோசமாக கொரோனா அழிவுகளை ஏற்படுத்தி இருப்பதையும் கண்டறிந்து இந்தியாவில் இருக்கும் பாஷா திரும்பவும் இங்கிலாந்து சென்று அங்குள்ள மக்களுக்கு டாக்டர் பணி செய்து சேவை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்

இங்கிலாந்து மக்களை காப்பாற்றுவது தனது கடமைகளில் ஒன்று என்று கூறியுள்ள அவர் தான் ஏற்கனவே பணிபுரிந்த மருத்துவமனையில் பணிபுரிந்து, கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்ய முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார். அவரது இந்த முடிவை மருத்துவமனை நிர்வாகிகள் வரவேற்றுப் பாராட்டியுள்ளனர்

More News

தொடரும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் சர்ச்சை!!!  

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மலேரியா நோய்க்கான மருந்துபொருளை ஏன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பரிந்துரைக்கிறார் என்பது குறித்து தற்போது அந்நாட்டில் கடும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டுள்ளன

கமல் லட்டரை படிச்சு முடிக்கிறதுக்குள்ள கொரோனாவே போயிடும்: பாஜக பிரபலம் கிண்டல்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.

ரெண்டு அப்பாவி பசங்கள ஏமாத்தியிருக்கேன்: விஜே மணிமேகலையின் வைரல் வீடியோ

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது முதல் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் முக்கிய நடிகர் நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் விளையாட்டுத்தனமான

இரண்டே வாரத்தில் டேமேஜ் ஆன சென்னை மால் திரையரங்குகள்: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 24 ஆம் தேதி முதல் தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கடைகள் உள்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன.