தங்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு மீண்டும் வெண்கலம்! குவியும் வாழ்த்துக்கள்

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே தங்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு இன்று வெண்கல பதக்கம் கிடைத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

தற்போது டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராஒலிம்பிக் போட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவருக்கு பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

இந்த நிலையில் சற்று முன்னர் பாரா ஒலிம்பிக் போட்டியில் நடந்த 50 மீட்டர் ரைபிள் பிரிவில் அவனி லெகாரா வெண்கலம் வென்றார். இதனை அடுத்து பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெண்கலம் என இரண்டு பதக்கங்களை வென்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இதுவரை 12 பதக்கங்கள் கிடைத்துள்ளது என்பதும் அதில் 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என்பதும் மேலும் பதக்கப் பட்டியலில் இந்தியா 36 வது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தமிழர் அடையாளங்களை மாற்றுவது திராவிடத்திருட்டுத்தனத்தின் உச்சம்.....! சீமான் காட்டம்...!

தமிழ் நூல்களுக்கு, 'திராவிடக் களஞ்சியம்' என பெயர்  வைக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது.

என் குழந்தைக்கு பிறந்தநாள்… செம ஷாக் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ஐஸ்வர்யா மேனனின் வொர்க்-அவுட் வீடியோ: குவியும் லைக்ஸ்கள்

தமிழ் நடிகையான ஐஸ்வர்யா மேனன் ஒர்க்அவுட் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்தே இந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

ஜல்லிக்கட்டில் நாட்டுமாடுகள் மட்டுமே....! அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு....!

இனி வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டுமாடுகளுக்கு மட்டும், அனுமதி தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 வருட கடின உழைப்பு.... இதனால் வாய்ப்புகள் பறிபோனது....! பிரபல சீரியல் நடிகர் பேட்டி....!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் "வேலைக்காரன்" என்ற  சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர்