close
Choose your channels

சென்னைக்கு வந்த விமானம்… பைலட்டுக்கு திடீரென ஹார்ட் அட்டாக்… பரப்புக்கு நடுவே நடந்த நிகழ்வுகள்!!!

Saturday, November 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னைக்கு வந்த விமானம்… பைலட்டுக்கு திடீரென ஹார்ட் அட்டாக்… பரப்புக்கு நடுவே நடந்த நிகழ்வுகள்!!!

 

நேற்று விஜயவாடாவில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர் நிறுவனத்தின் விமான ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து அந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் உடனடியாகத் தரை இறக்கப்பட்டு இருரக்கிறது. திருச்சி விமான நிலையத்தில் அந்த விமானம் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் எத்தனை பேர் என்பது போன்ற விவரங்களை இண்டிகோ நிறுவனம் வெளியிடவில்லை.

விமான பைலட் திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியவுடன் திருச்சி விமான நிலையத்தில் அந்த விமானம் உடனடியாக தரை இறக்கப்பட்டு அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவருக்கு சிறு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த மருத்துவர்கள் ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சையை அளித்தனர்.

இதையடுத்து அந்த விமானத்தின் சேவைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டு உள்ளன. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ரத்தான இந்த விமானத்தில் திருச்சியில் இருந்து சென்னைக்கு வர டிக்கெட் பதிவு செய்து இருந்தார் எனக் கூறப்படுகிறது. விமானம் ரத்து செய்யப்பட்டதால் அவர் மதுரைக்கு சாலை மார்க்கமாக சென்று அங்கிருந்து மற்றொரு விமானத்தின் மூலம் சென்னைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.