என்கவுண்டர் செய்த போலீசார்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பால் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,December 06 2019]

ஹைதராபாத் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த நான்கு பேர்களை இன்று அதிகாலை தெலுங்கானா போலீசார் என்கவுன்டர் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் என்கவுண்டர் செய்த போலீஸார்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குவிந்து வருகிறது. பள்ளி மாணவ-மாணவிகள் போலீசார்களை பாராட்டிய சம்பவங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பொதுமக்கள் போலீசாருக்கு இனிப்பு கொடுத்து பாராட்டி வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த என்கவுன்ட்டர் குறித்து தேசிய மனித உரிமை கமிஷன் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருந்த போதிலும், பொதுமக்கள் மற்றும் பெண்ணியவாதிகள் இடமிருந்து பெரும் ஆதரவை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நரேஷ் செல்பார் என்பவர் சற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி என்கவுண்டரில் ஈடுபட்ட தெலுங்கானா போலீசார் அனைவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் தனது நிறுவனத்தின் சார்பில் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

திருடலாம்னு வந்தேன் சார்.. ஆனா தூக்கம் வந்துருச்சு. திருடப்போன இடத்தில் தூங்கிய திருடன்.

விருதுநகரில் பெருமாள் கோயிலில் திருட வந்த செந்தூர்பாண்டி என்ற திருடன், மது போதையில் அங்கேயே உறங்கிவிட, அப்பகுதியில் ரோந்து சென்ற காவல்துறையினரிடம் சிக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

உத்திரபிரதேசம் மற்றும் டெல்லி போலீசார் தெலுங்கானா போலீசாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் - மாயாவதி.

ஹைதராபாத்தில் ஒரு வாரம் முன்பு பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டார்

லாட்டரியில் கிடைத்த பணத்தில் வாங்கிய நிலத்தில் புதையல்: கொட்டும் அதிர்ஷ்டம்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் லாட்டரியில் ரூபாய் 6 கோடி பரிசு கிடைத்தது. அந்த பணத்தில் அவர் ஒரு நிலத்தை வாங்கி விவசாயம் செய்த போது

என்கவுண்டர் கொண்டாட வேண்டிய விஷயம் கிடையாது. ஆனால்.... பிரபல நடிகை கருத்து

என்கவுண்டர் என்பது கொண்டாடப்பட வேண்டிய விஷயம் கிடையாது. ஆனால் இப்படி ஒரு நிலையை கொண்டு வந்தது இந்த சமூகம்தான் என்பதற்காக நாம் வெட்கப்படவேண்டும்,

என் மகளைக் கொன்றவர்கள் 7 ஆண்டுகளாக உயிரோடு இருக்கின்றனர்.. டெல்லி நிர்பயா தாயார் தெலுங்கானா என்கவுன்டரை வரவேற்று பேச்சு.

ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.