ரத்தக் கலரில் வெள்ளப் பெருக்கு? விசித்திர சம்பவத்தால் அலறும் மக்கள்!

  • IndiaGlitz, [Tuesday,February 09 2021]

இந்தோனேஷியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் பெக்கலோங்கன் நகர் முழுவதும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த வெள்ளப் பெருக்கு ரத்தச் சிவப்பு கலரில் இருப்பதுதான் மக்களை பீதி அடைய வைத்து இருக்கிறது.

பெக்கலோங்கன் நகர் முழுவதும் துணிகளுக்கு இயற்கையாக சாயம் போடும் மெழுகுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறதாம். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்க்கும் மழை நீர் முழுவதும் அந்நகரில் உள்ள ஜெங்க்காட் எனும் பகுதியில் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கி இருக்கிறது. ஜெங்க்காட்டில் இயங்கி வந்த பல சாய மெழுகு நிறுவனங்களில் இந்த வெள்ளநீர் புகுந்ததால் தற்போது வெள்ளப் பெருக்கு முழுவதும் சிவப்பு கலராக மாறி இருக்கிறது.

இந்தத் தகவல் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளத்தில் கடும் வைரலாகி வருகிறது. இதேபோன்று இந்தோனேஷியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பச்சை வெள்ளப் பெருக்கும் ஓடியது. காரணம் அங்கு செயல்பட்டு வந்த ஒரு உரம் தயாரிக்கும் ஆலையில் வெள்ளநீர் புகுந்ததால் தண்ணீர் முழுவதும் பச்சையாக மாறி இருக்கிறது. இந்நிலையில் இந்தோனேஷியாவில் இதுபோன்ற சம்பவங்களுக்கு பஞ்சமே இருக்காது என்றும் சிலர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

More News

உதயநிதியின் அரசியலுக்கு உதவ போகிறேனா? சந்தானம் விளக்கம்!

சந்தானம் நடித்த 'பாரீஸ் ஜெயராஜ்' படத்தின் பிரஸ்மீட் இன்று நடந்த நிலையில் இந்த பிரஸ்மீட்டில் சந்தானத்திடம் கேட்கப்பட்ட சுவராஸ்யமான கேள்விகளுக்கு அவரும் சுவராஸ்யமான பதில்களை அளித்தார் 

மனைவியுடன் ஜாலியாக திருமண நாளை கொண்டாடிய ரியோ: வைரல் புகைப்படங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய ரியோ, இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட ஐவரில் ஒருவராக இருந்தார் என்பது தெரிந்ததே. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர்

சூர்யாவுக்காக பிரார்த்தனை செய்த கீர்த்திசுரேஷ்: என்ன சொன்னார் தெரியுமா?

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சூர்யா சமீபத்தில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இருப்பினும் தற்போது சிகிச்சை பெற்று நலமாக இருப்பதாகவும் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி… இந்தியா படுதோல்வி!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 5 ஆம் தேதி தொடங்கிய இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்

தனுஷின் 'கர்ணன்' பட சூப்பர் அப்டேட்டை தந்த கலைப்பு தாணு!

தனுஷ் நடிப்பில் 'பரியேறும் பெருமாள்' இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கர்ணன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்