பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேனா? இந்திராஜா அளித்த விளக்கம்

  • IndiaGlitz, [Thursday,November 05 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா ஆகிய இரண்டு வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்

இந்த நிலையில் மேலும் ஒரு சிலர் வைல்ட்கார்ட் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகளும் விஜய்யின் ‘பிகில்’ படத்தில் நடித்தவருமான இந்திரஜா என்றும் செய்திகள் வெளிவந்தன. சமீபத்தில் இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த புகைப்படத்திலிருந்து அவர் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் எனவே விரைவில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியானது

ஆனால் தற்போது இது குறித்து இந்திரஜா விளக்கம் அளித்துள்ளார். தான் ஹைதராபாத்தில் ஒரு படபிடிப்பிற்க்காக வந்துள்ளதாகவும் அங்கு தங்கியிருந்த ஓட்டலில் இருந்து தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும், தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல்கள் வதந்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்த இந்திரஜா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்பது உறுதியாகி உள்ளது

View this post on Instagram

Analyse yourself ♥️✌

A post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17) on Nov 4, 2020 at 6:12pm PST

More News

ரணகளத்துக்கு நடுவே இணையத்தில் வைரலாகும் பாரக் ஒபாமா Shot!

அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பதற்கான ரணகளத்தில் அமெரிக்காவே அல்லாடி வருகிறது. இந்நிலையில் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா

ரஜினிக்கு அரசியலைவிட உடல்நலம் ரொம்ப முக்கியம்: கமல்ஹாசன்

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினி குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன்

விபிஎப் கட்டணத்தை ஏற்கிறோம், ஆனால் ஒரு நிபந்தனை: திரையரங்கு உரிமையாளர்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளதால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மட்டுமின்றி

அது என் குழந்தை இல்லை: வளைகாப்பு நிகழ்ச்சியில் மனைவியின் கள்ளக்காதலை அம்பலப்படுத்திய கணவர்!

மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியின்போது தனது மனைவியின் வயிற்றில் இருப்பது தன்னுடைய குழந்தை இல்லை என்றும் அது கள்ளக்காதலால் உருவான குழந்தை என்றும் கணவர்

இந்தியச் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 3 வயது சிறுமி!

22 இந்திய மொழிகளின் பெயர்களை குறைந்த வேகத்தில் உச்சரித்து 3 வயது சிறுமி, மத்திய அரசின் இந்தியச் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.