வேலைக்கு சேர்ந்த மூன்றே மாதத்தில் தூக்கில் தொங்கிய பெண் ஐடி ஊழியர்

  • IndiaGlitz, [Friday,July 07 2017]

கடந்த சில மாதங்களாகவே ஐடி ஊழியர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேற்று மைசூரில் ஒரு பெண் ஊழியர் தான் தங்கியிருந்த அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
21 வயது மீனாட்சி என்ற இளம்பெண் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு மைசூரில் உள்ள பிரபல முன்னணி நிறுவனம் ஒன்றில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வேலைக்கு சேர்ந்தார். இந்த நிலையில் அவர் தங்கியிருந்த அறை மூன்று நாட்களாக திறக்கப்படாமல் இருப்பதாகவும், அறையில் இருந்து துர்நாற்றம் வருவதாகவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் மீனாட்சியின் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மீனாட்சியின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் அழுகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரது உடல் பிரேதப்பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
போலீசார் மீனாட்சியின் அறையை ஆய்வு செய்தபோது லட்டர் எதுவும் கிடைக்கவில்லை. மீனாட்சியின் தாயார் இதுகுறித்து கண்ணீருடன் கூறியபோது, 'தனது மகளுடன் கடைசியாக கடந்த சனிக்கிழமை பேசியதாகவும், அதன் பின்னர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறினார். இதுகுறித்து மீனாட்சி பணிபுரியும் அலுவலகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியபோது, 'ஒரு நல்ல ஊழியரை இழந்துவிட்டது குறித்து எங்களுக்கு பெரும் துயரமாக இருப்பதாகவும், இதுகுறித்த விசாரணைக்கு அலுவலகம் முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றும் கூறினார். மேலும் மீனாட்சியின் பெற்றோர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

More News

மென்மொருள் மூலம் போலி ஏடிஎம் கார்டு. லட்சக்கணக்கில் கொள்ளையடித்த சென்னை வாலிபர் கைது

இன்றைய டெக்னாலஜி உலகில், எந்த பொருளை வாங்கினாலும் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் ஸ்வைப் செய்வது சர்வசாதாரணமாகி வருகிறது.

வேலைநிறுத்தம் வாபஸ் எதிரொலி: தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய அறிக்கை

மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் மாநில அரசின் கேளிக்கை வரி ஆகிய இரட்டை வரிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த திங்கள் முதல் திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்த நிலையில் நேற்று இதுகுறித்து தமிழக அரசுடன் திரையுலக பிரபலங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதையும், இதில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக வேலைநிறுத்தம் தற்காலிகமாக வ

வேகத்தைடையை கவனிக்காக ஓட்டுனரின் அலட்சியத்தால் பெண் பயணி பலி

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே வேகத்தடையை கவனிக்காமல் மிக வேகமாக வேகத்தடை மீது பேருந்து ஏறி இறங்கியதால் பேருந்தில் இருந்த பயணிகள் தூக்கி அடிக்கப்பட்டனர்.

4 நாட்களுக்கு பின் இன்று திரையரங்குகள் திறப்பு! புதிய கட்டணம் எவ்வளவு?

மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் மாநில அரசின் கேளிக்கை வரி ஆகிய இரட்டை வரிகளால் 58% வரை வரி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டதால் இதனை எதிர்த்து கடந்த திங்கள் முதல் திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்

வருத்தப்படாத வாலிபனுடன் இணைந்தார் சமந்தா

வருத்தப்படாத வாலிபன்', 'ரஜினிமுருகன்' ஆகிய இரண்டு வெற்றி படங்களை அடுத்து மீண்டும் இணைந்த சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியின் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது என்பதை பார்த்தோம்