close
Choose your channels

கலாபவன் மணி மரணம்: ஒரே ஒரு கேள்வியால் ஏற்பட்ட மூன்று கைது

Friday, March 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் மரணம் அடைந்த பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் மரணம் குறித்த மர்மம் நீங்காத நிலையில் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் தனது சகோதரரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியதால் போலிஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
முதலில் இது இயற்கை மரணம் என்றே போலீசார் முடிவு செய்த நிலையில் மணியின் சகோதரர் கேட்ட ஒரே ஒரு கேள்வியால் இந்த வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மரணத்திற்கு முந்தைய நாள் கலாபவன் மணி தன்னிடம் வேலை பார்த்த விபின், முருகன், அருண் ஆகிய மூவருடன் இணைந்துதான் மது அருந்தினார். ஆனால் மற்ற மூவருக்கும் எதுவும் ஆகாத நிலையில் மணியின் மதுவில் மட்டும் மெதில் ஆல்கஹால் என்ற விஷம் இருந்தது எப்படி? இது சதியாகத்தான் இருக்கும் என அவர் கேட்ட ஒரே கேள்வியால் போலீசார் தற்போது மூவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மருத்துவர்கள், 'மணியின் மதுவில் மெதில் ஆல்கஹால் கலந்திருப்பது உண்மைதான். இதை யாராவது கலந்தார்களா? அல்லது மணி அருந்தியது கள்ளச்சாராயமா? என்பதை மெதில் ஆல்கஹால் எவ்வளவு கலந்திருந்தது என்ற அளவை வைத்து கண்டுபிடித்துவிட முடியும் என்று கூறியுள்ளார்.
இந்த மரணத்தில் மேலும் ஒருசில மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.