close
Choose your channels

மகள் சிலேட்டில் படக் கதையை வெளியிட்ட பிரபல நடிகர்... பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Friday, June 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிருத்விராஜ். இவர் தமிழிலும் பட நல்ல படங்களில் நடித்து வரவேற்பை பெற்றுள்ளார். இவர் நடிகராவதற்கு முன்பு பல படங்களில் துணை இயக்குநராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் மோகன்லாலை வைத்து “லூசிபர்” எனும் மாஸ் திரைப்படத்தை இயக்கி இருந்தார். யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு இந்தத் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ரூ.200 கோடி வசூல் சாதனை படைத்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தனது முதல் படத்திலேயே நடிகர் பிருத்விராஜ் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார். இதனால் “லூசிபர்” படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பும் வெளியாகியது. ஆனால் இந்தப் படம் இடையிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது நடிகர் பிருத்விராஜ் தனது செல்ல மகள் Ally யின் சிலேட்டில் ஒன்லைன் ஸ்டோரி ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். அது இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்காவில் சிக்கி அகதிகளாக மாறிப்போன தந்தை மற்றும் மகனின் கதையைப் பற்றிய ஒன்லைன் ஸ்டோரி. நடிகர் பிருத்திவிராஜ் வெளியிட்ட இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

ஆனால் கொரோனா நேரத்தில் இந்தப் படத்தை எடுப்பது சாத்தியமற்றது என்றும் இதனால் வேறு ஒரு நல்ல கதையைத் தேர்வு செய்து இருப்பதாகவும் நடிகர் பிருத்விராஜ் தெரிவித்து உள்ளார். இதனால் மீண்டும் அவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார் என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிருத்விராஜின் நடித்த “கோல்ட் கேஸ்” திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.