மகள் சிலேட்டில் படக் கதையை வெளியிட்ட பிரபல நடிகர்... பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Friday,June 18 2021]

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிருத்விராஜ். இவர் தமிழிலும் பட நல்ல படங்களில் நடித்து வரவேற்பை பெற்றுள்ளார். இவர் நடிகராவதற்கு முன்பு பல படங்களில் துணை இயக்குநராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் மோகன்லாலை வைத்து “லூசிபர்” எனும் மாஸ் திரைப்படத்தை இயக்கி இருந்தார். யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு இந்தத் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ரூ.200 கோடி வசூல் சாதனை படைத்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தனது முதல் படத்திலேயே நடிகர் பிருத்விராஜ் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார். இதனால் “லூசிபர்” படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பும் வெளியாகியது. ஆனால் இந்தப் படம் இடையிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது நடிகர் பிருத்விராஜ் தனது செல்ல மகள் Ally யின் சிலேட்டில் ஒன்லைன் ஸ்டோரி ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். அது இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்காவில் சிக்கி அகதிகளாக மாறிப்போன தந்தை மற்றும் மகனின் கதையைப் பற்றிய ஒன்லைன் ஸ்டோரி. நடிகர் பிருத்திவிராஜ் வெளியிட்ட இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

ஆனால் கொரோனா நேரத்தில் இந்தப் படத்தை எடுப்பது சாத்தியமற்றது என்றும் இதனால் வேறு ஒரு நல்ல கதையைத் தேர்வு செய்து இருப்பதாகவும் நடிகர் பிருத்விராஜ் தெரிவித்து உள்ளார். இதனால் மீண்டும் அவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார் என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிருத்விராஜின் நடித்த “கோல்ட் கேஸ்” திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தலைமறைவாக இருந்த யூடியூபர் மதன் தருமபுரியில் கைது!

யூடியூபில் சிறுவர் சிறுமியர் மற்றும் இளம் பெண்களிடம் ஆபாசமாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட பப்ஜி மதன் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் சற்றுமுன் தர்மபுரியில் கைது

இந்த குட்டிப்பாப்பா தான் சிம்பு படத்தின் நாயகி: யாரென கண்டுபிடியுங்கள்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும், அதனால் பல மாநிலங்களில் படப்பிடிப்புக்கு அனுமதி

சூப்பர்டா தம்பி: தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்த ஹாலிவுட் இயக்குனர்கள்!

தனுஷ் தற்போது தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவரது மார்க்கெட் தற்போது உலக அளவில் விரிவடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தனுஷின் அடுத்த படத்தை இயக்கும் தேசிய விருது பெற்ற இயக்குனர்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ் தற்போது ஹாலிவுட் படமொன்றில் நடித்து வருகிறார் என்பதும் இதனை அடுத்து அவர் கார்த்திக் நரேன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முட்டாள் தனமான தம்பதி....! கட்டைப்பையில் இறந்த பச்சிளம் குழந்தை...!

பெற்றோர்கள் கட்டைப்பையில் வைத்து குழந்தையை எடுத்துச் சென்றதால், பரிதமாக உயிரிழந்த சம்பவம் திருப்பூரில் ஏற்பட்டுள்ளது.