close
Choose your channels

ஹர்திக் பாண்ட்யா மனைவி புகைப்படத்தை நீக்கிய இன்ஸ்டாகிராம்: என்ன காரணம்?

Wednesday, August 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் நடிகை நடாஷாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் ஏப்ரல் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருமணம் தள்ளிப்போனது. இருப்பினும் நடாஷா கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் ஹர்திக் பாண்டியா அறிவித்தார் என்பதும், அதன் பின் ஹர்திக்-நடாஷா ஜோடிக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா, நடாஷா ஆகிய இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது குழந்தையுடன் கூடிய தங்கள் குடும்ப புகைப்படங்களை பதிவு செய்து வந்தனர். அந்த வகையில் சமீபத்தில் நடாஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஹர்திக் பாண்டியா தனக்கு கன்னத்தில் முத்தமிடும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கான தலைப்பில் அவர் பயன்படுத்திய சில வார்த்தைகள் தவறானது என்றும் அது தங்கள் தளத்திற்கு எதிரானது என்றும் கூறி இன்ஸ்டாகிராம் அந்த புகைப்படத்தை நீக்கியது.

ஆனால் அதே புகைப்படத்தை மீண்டும் நடாஷா எந்தவித தலைப்பும் இல்லாமல் பதிவு செய்தார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடாஷாவின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் நீக்கிய விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

View this post on Instagram

❤️ #alreadymissyou ???? @hardikpandya93

A post shared by Nataša Stanković✨ (@natasastankovic__) on

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.