close
Choose your channels

எஸ்.எஸ்.ராஜமெளலி படத்தில் இணையவிரும்பும் சர்வதேச நிறுவனங்கள்!

Friday, December 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி, பாகுபலி 2, மற்றும் ’ஆர்.ஆர்.ஆர்’ ஆகிய திரைப்படங்கள் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றன என்பதும் இந்த மூன்று படங்களுமே ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கயிருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் படத்தைதான் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

அமேசான் காடு சம்பந்தமான வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பில் சர்வதேச நிறுவனங்களான குளோபல் ஸ்டுடியோ மற்றும் டிஸ்னி ஆகியவை இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.