தர்பாரில் தொடரும் 'பேட்ட' செண்டிமெண்ட்

  • IndiaGlitz, [Tuesday,May 21 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே அதில் முக்கியமாக இடம்பெற்றிருப்பது அசத்தலான ஓப்பனிங் பாடல். அதிலும் இந்த ஒப்பனிங் பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடுவது செண்டிமெண்ட்டான ஒன்றாக இருந்து வந்தது. இந்த ஃபார்முலா ரஜினியின் பல படங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' மற்றும் 'காலா' படங்களில் மட்டும் பயன்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' திரைப்படத்தில் ரஜினிக்கு ஒரு அட்டகாசமான பாடலை வைத்த இயக்குனர், அதில் எஸ்பிபியையும் பாட வைத்தார். இந்த செண்டிமெண்ட் தற்போது தர்பார் படத்திலும் தொடரவுள்ளது. ஆம், 'தர்பார்' படத்தில் இடம்பெறும் ரஜினியின் ஓப்பனிங் பாடலை எஸ்பிபி பாடவுள்ளாராம். அனிருத் இசையில் எஸ்பிபியின் பாடலை கேட்க ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

மும்பையில் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் மும்பையில் வரும் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

ஐஸ்வர்யாராய் குறித்த சர்ச்சை மீம்ஸ்: வருத்தம் தெரிவித்த நடிகர்!

நேற்று முன் தினம் மக்களவை தேர்தலின் பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தபோது அஜித்தின் 'விவேகம்' படத்தில் நடித்த நடிகர் விவேக் ஓபராய்

கேடிஎம் பைக்குகளை குறிவைத்து திருடிய சென்னை இளைஞன் கைது!

விலை உயர்ந்த கேடிஎம் பைக்குகளை குறிவைத்து திருடிய சென்னை இளைஞன் ஒருவனை போலீசார் குறிவைத்து பிடித்து கைது செய்துள்ளனர்.

சரத்குமார், ராதிகாவுடன் விஷால் ரகசிய சந்திப்பா?

நடிகர் சங்க தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் நாசர், விஷால், கார்த்தி உள்பட பலர் மீண்டும் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஒன்றரை டன் வெயிட்டுடா'! சூர்யாவின் பதிலுக்கு சிஎஸ்கே கமெண்ட்

நடிகர் சூர்யா இன்று டுவிட்டரில் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் என்பதை சற்றுமுன் பார்த்தோம்

ஆறு கதை, ஆறு டெக்னீஷியன்கள்: வெங்கட்பிரபு-சிம்புதேவன் படத்தில் புதுமை

இயக்குனர் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனியின் அடுத்த தயாரிப்பு திரைப்படத்தை இயக்குனர் சிம்புதேவன் இயக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை சிலமணி நேரங்களுக்கு முன் பார்த்தோம்.