செப்டம்பர் 19 முதல் களமிறங்குகிறார் 'தல': அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் குஷி!

செப்டம்பர் 19 முதல் அதிகாரபூர்வமாக ’தல’ களம் இறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் மாதமே நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியில் ஈடுபட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டன.

அதன் பின் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பதால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர்கள் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் நடவடிக்கைகளை எடுத்தனர்.

இதனை அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்காக 3 மைதானங்கள் தயார் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அவர்கள் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக சற்றுமுன் அறிவித்தார். மேலும் நவம்பர் 8ஆம் தேதி இந்த தொடரின் இறுதி போட்டி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் சூழல் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாததால், ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த போட்டியை நடத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 19 முதல் ஐபிஎல் போட்டி தொடங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி நீண்ட நாட்களுக்கு பின்னர் களமிறங்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தல ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் அரையிறுதி போட்டிக்கு பின் தல தோனி இன்னும் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

பயன்படுத்திய மாஸ்க், கையுறைகளை இப்படித்தான் அகற்ற வேண்டும்… மாசுகட்டுப்பாட்டு வாரியம் தகவல்!!!

பெருந்தொற்று நேரத்தில் சுய பாதுகாப்பு மிக அவசியம் என்பதை சுகாதாரத் துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வருகின்றனர்.

சாலைகள், வீதிகள், தெருக்கள், கார்கள் என எங்கு பார்த்தாலும் பிணம்!!! கொரோனாவால் தத்தளிக்கும் நாடு!!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஐபிஎல் 2020 எங்கே…. எப்போது… குறித்த முக்கிய அறிவிப்பு!!!

இந்த ஆண்டிற்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இல் நடக்க இருப்பதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டு இருக்கிறது.

விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2' படத்தை இயக்கும் தேசிய விருது பெற்ற பெண் இயக்குனர்!

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி, கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த 'நான்' என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்

'பிக்பாஸ் 3' நடிகை தற்கொலை முயற்சியா? முகநூல் பதிவால் பரபரப்பு

நான் மிகவும் மன சோர்வாக இருக்கிறேன். அதனால் இந்த உலகத்தை விட்டே போகப் போகிறேன்' என 'பிக்பாஸ் 3' நடிகை ஒருவர் தனது முகநூலில் பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது