ஐபிஎல் இறுதிப்போட்டி டிக்கெட் விற்பனை: ரசிகர்கள் அதிர்ச்சி

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஒருவழியாக வரும் ஞாயிறுடன் முடிவுக்கு வருகிறது. ஐபிஎல் தொடரில் இன்னும் இரண்டே போட்டிகள் மட்டுமே உள்ளது. ஒன்று சென்னை மற்றும் டெல்லி அணி மோது இரண்டாவது பிளே ஆஃப் போட்டி மற்றும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியும் மும்பையும் மோதும் இறுதிப்போட்டி

நாளை நடைபெறும் இரண்டாவது பிளே ஆஃப் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதவுள்ள நிலையில் இந்த போட்டியில் சென்னை அணி வென்று இறுதிப்போட்டியில் மும்பையுடன் மோதும் என பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த எதிர்பார்ப்பு நிஜமானால் இறுதி போட்டி அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இருக்காது.

இந்த நிலையில் ஐதராபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுக்கள் ஆன்லைன் மூலம் சற்றுமுன் விற்பனை தொடங்கிய நிலையில் இரண்டே நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுக்களும் விற்றுத்தீர்ந்துவிட்டது. இதனால் ஆயிரக்கணக்கான டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் அதிர்ச்சியுடன் கூடிய ஏமாற்றம் அடைந்தனர்.

More News

பிரபல நடிகர் தாக்கியதாக உதவியாளர் சென்னை போலீசில் புகார்

பிரபல நடிகர், இயக்குனர் பார்த்திபன் தாக்கியதாக அவருடைய உதவியாளர் ஒருவர் சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஜல்லி மீன்களால் உடல் ரீதியாக படாதபாடு படும் மீனவர்கள்..!

ராமநாதபுரம் மாவட்டத்தில், மீன் பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் பலர்,  ஜல்லி மீன்களால் பல்வேறு பிரச்சனைக்கு ஆளாகும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே வருகிறது...

தயாரிப்பாளர் சங்கத்தில் 9 பேர் நியமனம்: விஷால் தரப்பின் அதிரடி நடவடிக்கை!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தமிழக அரசு தனி அதிகாரி என்.சேகர் என்பவரை நியமனம் செய்து, இனிமேல் தயாரிப்பாளர் சங்கம் குறித்த முடிவுகளை அவரே எடுப்பார் என அறிவித்தது

கார்த்தியின் 'கைதி' படம் குறித்த முக்கிய தகவல்!

கார்த்தி நடித்த 'தேவ்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததை அடுத்து அவர் தற்போது 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

சுப்பிரமணியன் சுவாமியிடம் அரசியல் கற்க விரும்புகிறேன்: பிரபல நடிகை

அரசியலை சுப்பிரமணியன் சுவாமியிடம் இருந்து கற்க விரும்புவதாக பிரபல நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.