close
Choose your channels

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் அதிரடி கைது!

Thursday, September 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம் நடைபெறுவது பல ஆண்டுகாலமாகவே கடும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. தற்போது ஐபிஎல் 14 ஆவது சீசன் தொடரின் இரண்டாவது கட்டப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை டெல்லி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தலைநகர் டெல்லியின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள படர்பூர் மோலர்பாண்ட் எக்ஸ்டென்ஷனில் உள்ள ஒரு பிளாட்டில் ஐபிஎல் சூதாட்டம் நடைபெறுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் வந்ததை அடுத்து அங்கு அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்ட ஆகாஷ் (30), அஹ்சன் (30), சுனித் குமார் சின்ஹா (37), முகேஷ் (42), முகமது ஷாஜாத் (32) ஆகிய 5 பேரையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 2 மடிக்கணினிகள், 13 மொபைல் போன்கள், ஒரு டிவி மற்றும் ரூ.52,000 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும் தேடும் பணியில் டெல்லி போலீசார் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.