ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் அதிரடி கைது!

  • IndiaGlitz, [Thursday,September 23 2021]

ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம் நடைபெறுவது பல ஆண்டுகாலமாகவே கடும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. தற்போது ஐபிஎல் 14 ஆவது சீசன் தொடரின் இரண்டாவது கட்டப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை டெல்லி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தலைநகர் டெல்லியின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள படர்பூர் மோலர்பாண்ட் எக்ஸ்டென்ஷனில் உள்ள ஒரு பிளாட்டில் ஐபிஎல் சூதாட்டம் நடைபெறுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் வந்ததை அடுத்து அங்கு அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்ட ஆகாஷ் (30), அஹ்சன் (30), சுனித் குமார் சின்ஹா (37), முகேஷ் (42), முகமது ஷாஜாத் (32) ஆகிய 5 பேரையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 2 மடிக்கணினிகள், 13 மொபைல் போன்கள், ஒரு டிவி மற்றும் ரூ.52,000 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும் தேடும் பணியில் டெல்லி போலீசார் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

More News

ஜெட் வேகத்தில் வழியும் எரிமலை குழம்புகள்… ஸ்பெயினில் தொடரும் பதற்றம்!

ஸ்பெயின் நாட்டில் உள்ள லா-பால்மா தீவில் பல ஆண்டுகளாக கனன்று கொண்டிருந்த எரிமலை

உள்ளாட்சி தேர்தல்: விஜய் மக்கள் இயக்கத்தினர் இருவர் போட்டியின்றி தேர்வு!

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 2 பேர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் 

யோகிபாபு-ஓவியா படத்தின் டைட்டில் அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபுவுடன் பிரபல நடிகை ஓவியா இணைந்து ஒரு படத்தை திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

சமந்தாவுடன் விவாகரத்து: முதல்முறையாக விளக்கமளித்த நாகசைதன்யா!

பிரபல நடிகை சமந்தா அவரது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய உள்ளார் என வதந்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது என்பது தெரிந்ததே.

பிவி சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடும் தீபிகா படுகோன்: வெற்றி பெற்றது யார்?

பிரபல பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து அவர்கள் சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் என்பது தெரிந்ததே