மும்பையில் மட்டும் ஐபிஎல் போட்டிகளா? ரசிகர்களை ஏமாற்றிய தகவல்!

சர்வதேசப் போட்டிகளைவிட ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு இருந்துவருகிறது. அந்த அளவிற்கு விறுவிறுப்பை கொண்டிருக்கும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ மும்பை நகரில் நடத்த முடிவெடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு நாட்டில் நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டும் இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு பிசிசிஐ ஆலோசித்து வந்தது. பின்னர் ஒருவழியாக இந்தியாவிலேயே ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

ஆனால் 10 அணிகளைக் கொண்ட 15 சீசன் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் மும்பை நகரின் 3 மைதானங்களில் மட்டுமே நடத்தப்படும் என பிசிசிஐ முடிவெடுத்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வான்கடே, சிசிஐ, பாட்டில் ஸ்டேடியம் எனும் 3 மைதானங்களில்தான் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் வீரரர்கள் தொலை தூரங்களுக்குப் பயணிப்பதை தவிர்க்கும் வகையிலும் பேருந்து போக்குவரத்தைக் கொண்டு வீரர்களை பாதுகாக்கும் முயற்சிக்காகவும் இந்த முடிவு எட்டப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் கொரோனா பரவல் குறித்து கவலை அடைந்திருக்கும் பிசிசிஐ பிப்ரவரி 12,13 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஐபிஎல் ஏலத்திற்கான இடத்தை இதுவரை அறிவிக்காமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'நீ அந்த வீடியோவை அனுப்பு, நான் இந்த வீடியோவை அனுப்புறேன்: யாஷிகாவின் நெத்தியடி பதில்!

நடிகை யாஷிகாவிடம் வீடியோ அனுப்ப சொன்ன நெட்டிசன் ஒருவரிடம், 'நீ அந்த வீடியோவை அனுப்பினால், நான் நீ கேட்ட வீடியோவை அனுப்புகிறேன்'

கடவுள் உள்ளாடையை அளவெடுக்கிறார்… சர்ச்சை கருத்தால் சிக்கிய பிரபல நடிகை!

மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஒருவர் சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் பேசியிருக்கும்

மிரட்டியதும் மிரண்டு போனதும் ஒரே ஜோடி கண்களா? நடிகைக்கு நாசர் எழுதிய கடிதம்!

மிரட்டியதும்,  மிரண்டுபோனது ஒரே ஜோடி கண்களா? என ஆச்சரியத்துடன் நடிகர் நாசர் பழம்பெரும் நடிகைக்கு கடிதம் எழுதியுள்ளார். 

ஒரே நேரத்தில் அஜித், விஜய்யுடன் நடிக்கும் பிரபல நடிகர்!

அஜித் மற்றும் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படங்களில் ஒரே நேரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

கடலில் ஒய்யாரமாக மிதக்கும் மாளவிகா மோகனன்: வைரல் புகைப்படம்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்