ஐபிஎல் 2022: எந்தெந்த அணிகள் யார் யாரை தக்க வைத்தனர்? எத்தனை கோடி?

  • IndiaGlitz, [Wednesday,December 01 2021]

2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் வரும் ஜனவரி மாதம் இந்த தொடருக்கான வீரர்களின் ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே உள்ள எட்டு அணிகளுடன் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் இணைந்து உள்ளதை அடுத்து அனைத்து அணிகளுக்கும் வீரர்களின் ஏலம் நடைபெறும் என்றும் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள நேற்றுடன் கெடு முடிவடைந்த நிலையில் தற்போது எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துக் கொண்டுள்ளனர் என்றும் அவர்களுக்கு உரிய ஏலத் தொகை எத்தனை கோடி என்பது குறித்தும் தகவல்கள் வந்துள்ளன. அந்த தகவல் குறித்த முழு விவரங்கள் இதோ:

சென்னை சூப்பர் கிங்ஸ்: தோனி- ரூ.12 கோடி, ஜடேஜா ரூ.16 கோடி, மொயின் அலி ரூ.8 கோடி, ருத்ராஜ் ரூ.6 கோடி.

டெல்லி அணி: ரிஷப் பண்ட்: ரூ.16 கோடி, அக்சர் பட்டேல் ரூ.9 கோடி பிரித்வி ஷா ரூ.7.50 கோடி, அன்ரிச் நார்ட்ஜே ரூ.6.50 கோடி.

கொல்கத்தா அணி: ரஸல் ரூ.12 கோடி, வருண் சக்கரவர்த்தி ரூ.8 கோடி, வெங்கடேஷ அய்யர் ரூ.8 கோடி, சுனில் நரேன் ரூ.6 கோடி.

மும்பை அணி: ரோஹித் சர்மா ரூ.16 கோடி, பும்ரா ரூ.12 கோடி, சூர்ய குமார் யாதவ் ரூ.8 கோடி, பொல்லார்ட் ரூ.6 கோடி ஆகிய நால்வரை தக்க வைத்துள்ளது;

பஞ்சாப் அணி: மயங்க் அகர்வால் ரூ.12 கோடி, அர்ஷிதீப் சிங்: ரூ.4 கோடி

ராஜஸ்தான் அணி: சஞ்சு சாம்சன் ரூ.14 கோடி, பட்லர் ரூ.10 கோடி, ஜெய்ஸ்வால் ரு.4 கோடி.

பெங்களூரு அணி: விராட் கோலி ரூ.15 கோடி, மேக்ஸ்வெல் ரூ.11 கோடி, முகமது சிராஜ் ரூ.7 கோடி ஆகிய மூவரை தக்க வைத்துள்ளது

ஐதராபாத் அணி: கேன் வில்லியம்ஸ் ரூ.14 கோடி, அப்துல் சமது ரூ.4 கோடி, உம்ரன் மாலிக் ரூ.4 கோடி.

More News

'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவின் ஒத்திவைப்பு அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம்

இந்தியாவின் பிரமாண்ட படைப்புகளில் ஒன்றான 'ஆர்.ஆர்.ஆர். படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

'மணி ஹெய்ஸ்ட்' அடுத்த பாகம்: டைட்டில் அறிவிப்பு!

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஒளிபரப்பான 'மணி ஹெய்ஸ்ட்' என்ற தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் உலகம் முழுவதும் இந்த தொடருக்கு மில்லியன் கணக்கானோர் ரசிகர்களாக உள்ளனர்

ராஜூ-பாவனி இடையே வெடித்தது சண்டை!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய 59வது நாளின் முதல் புரமோ வீடியோவில் ராஜு மற்றும் பாவனி இடையே ஏற்படும் சண்டை குறித்த காட்சிகள் உள்ளன.

பிரம்மாண்டம், பிரமிப்பு நிறைந்த மரைக்காயர்... டிரெய்லர் வெளியீடு!

நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகி 3 தேசிய விருதுகளையும் 3 கேரள விருதுகளையும் அள்ளிக் குவித்து இருக்கும் திரைப்படம் “மரைக்காயர் அரபுக்கடலின் சிங்கம்“.

பிறந்தநாளில் பசுமை மீது பாசம் காட்டும் இளம் நடிகை… வைரல் வீடியோ!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை ராஷி கண்ணா தற்போது தமிழ் சினிமாவிலும் பிசியான நடிகையாக இருந்து வருகிறார்.