'இறைவி' படத்தின் கதை இதுதான்

  • IndiaGlitz, [Saturday,April 16 2016]

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'இறைவி' படத்தின் டிரைலர் நேற்று வெளியானதில் இருந்தே இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.


இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்து நாயகன் விஜய்சேதுபதி கூறியதாவது: ஆண்களின் உலகத்தைச் சுற்றியிருக்கிற மனைவி, காதலி, சகோதரி, அம்மா என்று இவர்களின் கதையே இறைவி. நாம் கவனிக்காமல் விட்ட இவர்களின் மறுபக்கக் கதையே இப்படம். நாம் அவர்களை சரியாகக் கவனி்க்காமல் விட்டுவிட்டோமா என்று படம் முடிந்து வெளியே வரும் அனைவருக்குள்ளும் ஓர் ஆதங்கத்தை ஏற்படுத்தும். எத்தனையோ படங்களில் நடித்துவிட்டாலும், இறைவி முதல் காட்சியில் ரசிகர்களுடன் உட்கார்ந்து பார்க்கவேண்டும் என்பதே என் ஆசை' என்று கூறினார்.

மேலும் 'இறைவன்' என்பதன் பெண்பால்தான் 'இறைவி' என்றும், இதுவரை தமிழ் சினிமா தொடாத கதைக்களம் 'இறைவி' படத்தின் கதை என்பதை தங்களால் அடித்து கூற முடியும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். இதன் காரணமாக வரும் 20ஆம் தேதி வெளிவரவுள்ள இந்த படத்திற்கு பெரும் எதிர்பாரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

More News

அஜித்தின் வெறி பிடித்த ரசிகன் நான். அர்த்தநாரி ராம்குமார்

கோலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர், நடிகையர் உள்பட பல நட்சத்திரங்கள் தங்களை ஒரு பெரிய நடிகரின் ரசிகன் என்று சொல்லிக்கொள்வது அவர்களது படங்களை புரமோஷன் செய்யும் ஒரு யுக்தியாகவே பார்க்கப்படுகிறது...

'தெறி' வெற்றி. ரசிகர்களுக்கு நன்றி சொன்ன இளையதளபதி

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் நேற்று முன் தினம் தமிழ்ப்புத்தாண்டில் ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை பெற்று நல்ல வசூலுடன் உலகம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கின்றது....

'தோழா'வுக்கு ஓகே சொல்வாரா அமிதாப்பச்சன்?

கார்த்தி, தமன்னா, நாகார்ஜூனா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தோழா' திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது...