இரட்டை அர்த்தத்தில் டைட்டில் வைத்த 'இருட்டு அறை' இயக்குனர்

  • IndiaGlitz, [Thursday,October 01 2020]

’ஹர ஹர மகாதேவகி’ மற்றும் ’இருட்டு அறையின் முரட்டு குத்து’ ஆகிய இரண்டு அடல்ட் காமெடி திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார். இந்த நிலையில் ’இருட்டு அறையின் முரட்டு குத்து’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அவரே நடித்து இயக்கி வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்றும் டைட்டிலை நடிகர் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த படத்தின் டைட்டில் ’இரண்டாம் குத்து’ என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலும் இரட்டை அர்த்தத்துடன் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் கூறி வருகின்றனர்.

சந்தோஷ் ஜெயகுமார், பிக்பாஸ் புகழ் டேனியல், மீனால் சாஹூ, ஷாலு ஷம்மு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார்.

More News

பிரகாஷ்ராஜூக்கு நன்றி கூறிய த்ரிஷா: ஏன் தெரியுமா?

பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று தனது மகனுடன் இணைந்து தனது தனது வீட்டின் தோட்டத்தில் செடிகளை நட்டார் என்றும் இது குறித்த வீடியோ சமூக வளைதளத்தில்

பாலாவின் 'வர்மா' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு!

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த முதல் திரைப்படம் 'வர்மா'. இந்த திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருந்த

30 வருடத்திற்கு பின் மீண்டும் தமிழ்ப்படத்தில் அமலா: இயக்குனர், ஹீரோ யார்?

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'வேலைக்காரன்', 'மாப்பிள்ளை', உலக நாயகன் கமல்ஹாசனுடன் 'சத்யா', 'வெற்றி விழா' பிரபுவுடன் அக்னி நட்சத்திரம்', 'இல்லம்', 'நாளைய மனிதன்,

எஸ்பிபி முதலில் பாடியது எனக்குதான், எம்ஜிஆருக்கு அல்ல: சிவகுமார்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் சமீபத்தில் காலமானதை அடுத்து அவருடன் பழகிய நாட்கள், நேர்ந்த அனுபவங்கள் குறித்து பல திரையுலக பிரமுகர்கள்

சூர்யாவை சவாலுக்கு அழைத்த பிரபல வில்லன் நடிகர்: வீடியோ வைரல்

கடந்த சில வாரங்களாக திரையுலகினர் இடையே கிரீன் இந்தியா சேலன்ச் என்ற சேலஞ்ச் பரவி வருகிறது என்பது தெரிந்ததே,