'இரவுக்கு ஆயிரம் கண்கள்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,April 27 2018]

அருள்நிதி நடித்த 'பிருந்தாவனம்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள அடுத்த படமான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' திரைப்படம் கோலிவுட் வேலைநிறுத்தம் தொடங்கும் முன்பே ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

இந்த நிலையில் தற்போது வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்து புதிய திரைப்படங்களும் ரிலீஸாகி கொண்டிருக்கும் நிலையில் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வரும் மே 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நடிகர் அருள்நிதி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் இதே தினத்தில்தான் விஷாலின் 'இரும்புத்திரை' ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், சாயாசிங், சுஜா வருணே, ஆனந்த்ராஜ், ஜான்விஜய், லட்சுமி ராமகிருஷ்ணன், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை மாறன் என்பவர் இயக்கியுள்ளார். சாம் சி.எஸ் இசையில், அரவிந்த்சிங் ஒளிப்பதிவில், சான் லோகேஷ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது,.

More News

வாழ்க்கையில் முன்னேற அட்ஜஸ்ட் அவசியம்: படுக்கை விவகாரம் குறித்து பாஜக எம்பி

கடந்த சில நாட்களாகவே ஸ்ரீரெட்டி உள்பட பல நடிகைகள் படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் குறித்து பரபரப்பான தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

'காலா' கண்ணாடியுடன் அமெரிக்காவில் வலம் வரும் ரஜினி: வைரலாகும் புகைப்படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு உடல்பரிசோதனை செய்வதற்காக சென்றார் என்பது தெரிந்ததே.

நான் அரசியலுக்கு வரப்போவதில்லை: ஆனால்...: அரவிந்தசாமி

அரவிந்தசாமி நடிப்பில் சித்திக் இயக்கிய 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் வரும் மே 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

'இருட்டு அறையில் முரட்டு குத்து' ரிலீஸ் தேதி அறிவிப்பு

சமீபத்தில் வெளியான 'ஹர ஹர மகாதேவகி' என்ற வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கியுள்ள அடுத்த படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'

நயன்தாராவின் அடுத்த படம் குறித்து அனிருத்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்று 'கோலமாவு கோகிலா'. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும்