சூழலை கையாள தெரியவில்லை.. மனம் வருந்துகிறேன்: யூடியூபர் இர்பான்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல யூட்யூபர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர் இர்பான் குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில், அவரது ஒரு வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்காக மனம் வருந்துகிறேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ரம்ஜான் தினத்தன்று, இர்பான் தனது மனைவியுடன் காரில் சென்று, ஏழைகளுக்கு உதவி பொருட்களை காரிலிருந்தே வழங்கினார். அப்போது, உதவி கிடைக்காத சிலர் முண்டி எடுத்துக்கொண்டு, காருக்குள் கைகளை நீட்டிய நிலையில், அவர்களைப் பற்றி இர்பான் அவதூறாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இர்பானின் இந்த செயல்களுக்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது அவர் தனது செயலுக்கு வருந்துவதாக தெரிவித்துள்ளார். "முன்னேற்பாடு எதுவும் இல்லாமல் மனைவியுடன் காரில் சென்று உதவி செய்ததால், அத்தகைய சூழ்நிலையை தன்னால் சமாளிக்க தெரியவில்லை. அதில் சில விஷயங்கள் செய்து விட்டேன். அதற்காக மனம் வருந்துகிறேன்," என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், "கஷ்டப்படுபவர்கள் மீது அன்பு இல்லை" என சிலர் கூறுகிறார்கள். ஆனால், அது தவறான குற்றச்சாட்டு. நானும் அங்கிருந்து வந்தவன்தான்," என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். இருப்பினும், அவர் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிந்து கொண்ட குற்றச்சாட்டு மற்றும் குழந்தையின் தொப்புள் கொடியை அவரே வெட்டிய குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், தற்போது இன்னொரு சர்ச்சை அவர் மீது எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments