இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்… விளாசும் முன்னாள் வீரர்!

டி20 உலகக்கோப்பை அரை இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான வாய்ப்பை இந்தியா நழுவவிட்டு இருக்கிறது. இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் காணப்படுகின்றனர். இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியைக் குறித்து பேசிய முன்னாள் வீரர் இர்பான் பதான் “இந்திய அணித் தேர்வில் இப்படி நடப்பது ஆச்சர்யமாக இருக்கிறது“ என்று சாடியுள்ளார்.

டி20 உலகக்கோப்பைக்கான முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுமோசமாக தோற்றுப்போனது. இதையடுத்து நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து அணியின் முதல் வீரரர்களாக களம் இறங்கவேண்டிய ரோஹித் சர்மா மற்றும் ராகுலுக்கு பதிராக ராகுல் இஷான் கிஷன் ஜோடி களம் இறங்கினர்.

இதற்கு காரணம் நியூசிலாந்து வீரர் டிரெண்ட் பவுல்ட் சுவிங் பந்துவீசுவார் எனக் கூறப்பட்டது. இதனால் முதல் ஆளாக களம் இறங்கவேண்டிய ரோஹித் ஒரு இடம் மாறி 3 ஆவதாக களம் இறங்கினார். இந்நிலையில் நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத இந்திய அணி வீரர்கள் சரசரவென சரிந்து 20 ஓவர் முடிவில் 110 ரன்களை மட்டுமே எடுத்தனர்.

இதனால் அடுத்து ஆடிய நியூசிலாந்து வீரர்கள் எந்த சிரமமும் இல்லாமல் இலக்கை எட்டமுடிந்தது. அதோடு நியூசிலாந்து வீரர்களுக்கு பந்துவீசிய இந்திய பவுலர்கள் ஏனோ தானோ வென்று பந்துவீசினர் என்றும், டஃப் கொடுக்க வேண்டிய இடத்தில் மந்தமாக இருந்தனர் என்றும் ரசிகர்கள் கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்

இதையடுத்து, “எந்தவொரு பெரிய போட்டியிலும் அணியின் பிளெயிங் லெவனை வீரர்களின் இடத்தை ஒரே ஒரு ஆட்டத்தில் மாற்றி விரும்பிய முடிவுகளைப் பெற முடியாது. வீரர்களுக்கு ஸ்திரத்தன்மை தேவை. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இப்படி ஒரு மாற்றம் செய்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது“ என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

More News

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' அட்டகாசமான கிளிம்ப்ஸ் வீடியோ!

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி  இயக்கத்தில் உருவாகி வந்த 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படம் சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுஷாந்த்சிங் ராஜ்புத் முன்னாள் காதலிக்கு திருமணம்: தொழிலதிபரை மணக்கின்றார்!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவருடைய முன்னாள் காதலிக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் என்றும் அவர் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

புனித் ராஜ்குமார் பொறுப்பை இனி நான் ஏற்று கொள்கிறேன்: விஷால் அறிவிப்பு!

சமீபத்தில் நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற நிலையில் அவருடைய பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என பிரபல தமிழ் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 

பிக்பாஸ் ஐக்கி பெர்ரியின் முந்தைய தோற்றம்!

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவர் ஐக்கி பெர்ரி என்பதும் அவர் மிகவும் சிறப்பாக இதுவரை விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் வீட்டில் பேச வேண்டிய நேரத்தில் சரியாக

வெளியே போகவும் தயார், நிரூப் சொன்னதை செய்ய முடியாது: அக்சரா ஆவேசம்

வீட்டை விட்டு வெளியே செல்லக்கூட தயார், ஆனால் நிரூப் சொன்னதை செய்ய முடியாது என பிக்பாஸ் இடம் அக்சரா ஆவேசமாக கூறும் காட்சியின் வீடியோ இன்றைய முதல் புரமோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.