'இருட்டு அறையில் முரட்டு குத்து' இயக்குனருடன் மீண்டும் இணையும் கெளதம் கார்த்திக்?

  • IndiaGlitz, [Wednesday,September 30 2020]

இயக்குனர் சந்தோஷ்குமார் இயக்கிய இரண்டு அடல்ட் திரைப்படங்களான ‘ஹர ஹர மகாதேவகி’ மற்றும் ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய படங்களில் நடித்தவர் கௌதம் கார்த்திக். இதனை அடுத்து ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க கவுதம் கார்த்திக்கை இயக்குனர் அணுகியபோது அவர் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்பட்டது

இதனை அடுத்து சந்தோஷ் ஜெயக்குமாரே இந்த படத்தை இயக்கி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில வாரங்களாக போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ’இருட்டு அறையில் முரட்டு குத்து 2’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கௌதம் கார்த்திக் நாளை மாலை 6 மணிக்கு தனது சமூக வலைதளத்தில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்க மறுத்த கௌதம் கார்த்திக் குறைந்தபட்சம் அந்த படத்தின் டைட்டிலை வெளியிட முன் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சந்தோஷ் ஜெயக்குமார், மீனால் சாஹூ, ஷாலு ஷம்மு உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை தரன் குமார் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

'தனி ஒருவன் 2' படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல்

ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தனி ஒருவன்'. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை

கொரோனாவால் இந்து முன்னணி அமைப்பின் நிறுவனத் தலைவர் ராம.கோபாலன் மறைவு!!!

கடுமையான மூச்சுத் திணறல் காரணமாக சில தினங்களுக்கு முன்பு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்து முன்னணி அமைப்பின் நிறுவனத் தலைவர் ராம.

ஆன்லைன் வகுப்பால் தெறித்து ஓடுபவர்களுக்கு மத்தியில்… அதிலேயே உலகச் சாதனை படைத்த நம்ம ஊரு பொண்ணு!!!

கொரோனா தாக்கத்தால் பள்ளி, கல்லூரி படிப்புகள் அனைத்தும் ஆன்லைன் முறைக்கு மாறியிருக்கிறது.

ஹரிஷ் கல்யாண்-ப்ரியா பவானிசங்கர் காதலுக்கு உதவி செய்யும் விஜய் தேவரகொண்டா!

நேற்று திடீரென சமூக வலைதளங்களில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு

21 வருடங்களுக்கு முன் இதே நாள்: த்ரிஷாவின் மலரும் நினைவுகள் 

தமிழ் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் மிகச் சில நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. இவரது நடிப்பில் ஏற்கனவே மூன்று படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது