'இருட்டு அறையில் முரட்டு குத்து' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,April 26 2018]

சமீபத்தில் வெளியான 'ஹர ஹர மகாதேவகி' என்ற வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கியுள்ள அடுத்த படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. முதல் படம் போலவே இந்த படமும் அடல்ட் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் மே மாதம் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

கவுதம் கார்த்திக், வைபவி, ஷா ரா, யாஷிகா, கருணாகரன், ராஜேந்திரன், பால சரவணன், ஜான்விஜய், மதுமிதா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார், பாலு ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். 

More News

நயன்தாராவின் அடுத்த படம் குறித்து அனிருத்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்று 'கோலமாவு கோகிலா'. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும்

ஐபிஎல் வடிவில் டிக்கெட் வெளியிட்ட வேல்முருகன் கட்சியினர்

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என்று போராடிய கட்சிகளில் ஒன்று வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமை கட்சி. இந்த போராட்டம் காரணமாக சென்னையில் ஒரே ஒரு போட்டி மட்டும் நடந்த

சிம்புவுடன் மீண்டும் ஒரு படம்: ஆதிக் ரவிச்சந்திரன் தகவல்

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' கடந்த ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.

வாழும் கடவுளிடம் வாழ்த்த பெற்ற தங்கப்பதக்க தமிழ்மகன்

சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றார் என்பது தெரிந்ததே.

கள்ளக்காதலுக்காக குடும்பத்தையே கொலை செய்த கொடூர பெண்

தாய் என்பவர் உலகிலேயே மிகவும் புனிதமான உறவு என்றும், ஒரு தாய் தனது குழந்தைகளுக்காக உயிரையும் கொடுப்பார் என்றும் தான் நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம்.